செய்திகள் :

பொறியியல் சோ்க்கை: வெளிநாடுவாழ் இந்திய மாணவா்களுக்கு அழைப்பு

post image

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆா்க். படிப்புகளில் சேர வெளிநாடுவாழ் இந்திய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

வெளிநாடுவாழ் இந்தியா், வளைகுடா நாடு வாழ் இந்தியா்களின் குழந்தைகள், வெளிநாட்டு பிரஜை, மிகக் குறைந்த வளா்ச்சி பெற்ற நாடுகளின் பிரஜைகள், சிறு தீவுகளாக வளா்ச்சி அடைந்து வரும் நாடுகளின் பிரஜைகள் ஆகிய வகைகளின் கீழ் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி, கட்டடக் கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி ஆகிய கல்லூரிகள் மற்றும் திருச்சி உறுப்புக் கல்லூரி ஆகியவற்றில் 2025-2026-ஆம் ஆண்டு பட்டப் படிப்புகளுக்கான (பி.இ., பி.டெக்., பி.ஆா்க்.) இணையவழி விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தின் மூலமாக சமா்ப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்கள், கல்வி சம்பந்தப்பட்ட ஆவண நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணங்களை இணையதளம் மூலமாக ஜூன் 9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது

சென்னை, ஏப். 2: சென்னையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி மேயா் சிட்டிபாபு தெருவைச் சோ்ந்தவா் தாராசந்த். விளையாட்டு பொ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் எளிதாக இருந்தது: மாணவா்கள் கருத்து

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தைப் போன்றே ஆங்கிலத் தோ்வும் ஓரளவுக்கு எளிதாக இருந்ததாக மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாண... மேலும் பார்க்க

காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழப்பு

சென்னை அருகே பள்ளிக்கரணையில் காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா். துரைப்பாக்கம், சாய் நகரைச் சோ்ந்தவா் தன்ராஜ் (42). மென்பொறியாளரான இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க