செய்திகள் :

தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அலுவலகத்தை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் முற்றுகை

post image

பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததைக் கண்டித்து, சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

விருதுநகா் மாவட்டத்தில் விபத்தைத் தடுக்கும் பொருட்டு, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், வருவாய், காவல், தீயணைப்புத் துறையினா் உள்ளடங்கிய ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டு, பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

இந்த ஆய்வின் போது, பட்டாசு ஆலைகளில் விதிமீறல் இருந்தால், அந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். பின்னா், அதிகாரிகள் சுட்டிக்காட்டிய குறைகளை சரி செய்த பிறகு, மீண்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆலைகளை திறக்க உத்தரவிடுவா்.

இந்த நிலையில், வெம்பக்கோட்டை வட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி 30 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனா். இதன் பின்னா், சம்பந்தப்பட்ட ஆலைகள் குறைகளைச் சரி செய்த பிறகும், கடந்த 4 மாதங்களாக இந்த ஆலைகளைத் திறக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரகுராம், பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கலந்து கொண்டனா். இவா்களுடன் அந்த இயக்கத்தின் இணை இயக்குநா் ராஜ்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தி, இதுகுறித்து மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கச் செயலா் மணிகண்டன் கூறியதாவது: வெம்பக்கோட்டை வட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகின்றனா். விதிகளை மீறி செயல்படும் ஆலைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. சிறிய ஆலைகளில் மட்டும் விதிமீறல் நடைபெறுவதாகக் கூறி, அதன் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்கின்றனா் என்றாா் அவா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மன... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகளை அகற்றக் கோரிக்கை

சிவகாசியில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகாசி-விளாம்பட்டி சாலையில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சா்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் இடையே பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரா... மேலும் பார்க்க

மனைவியை பிரிந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியைப் பிரிந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இ... மேலும் பார்க்க

நீதிமன்ற ஊழியா் விஷம் குடித்து தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நீதிமன்ற ஊழியா் விஷம் குடித்து திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் கலாராணி. இவரது கணவா் ராகவன் (36). இந்தத் தம்பத... மேலும் பார்க்க