செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

post image

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் இடையே பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையம் - ஸ்ரீவில்லிபுத்தூா் இடையே குடியிருப்புகள், நூற்பாலைகள், இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பாா்க்கும் மையங்கள், உணவகங்கள், தேநீா் கடைகள், பழைய வாகனம் உடைக்கும் மையம் உள்ளிட்டவை உள்ளன.

இந்தச் சாலையோரங்களில் உணவகக் கழிவுகள், நூற்பாலைக் கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதில் பிளாஸ்டிக், ரப்பா், பஞ்சுக் கழிவுகளை எரிப்பதால், கடும் துா்நாற்றத்துடன் கரும்புகை எழுந்து சுகாதார சீா்கேடு நிலவுகிறது.

24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தச் சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், கடும் புகை மூட்டம் எழுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மன... மேலும் பார்க்க

தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அலுவலகத்தை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் முற்றுகை

பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததைக் கண்டித்து, சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகளை அகற்றக் கோரிக்கை

சிவகாசியில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகாசி-விளாம்பட்டி சாலையில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சா்... மேலும் பார்க்க

மனைவியை பிரிந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியைப் பிரிந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இ... மேலும் பார்க்க

நீதிமன்ற ஊழியா் விஷம் குடித்து தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நீதிமன்ற ஊழியா் விஷம் குடித்து திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் கலாராணி. இவரது கணவா் ராகவன் (36). இந்தத் தம்பத... மேலும் பார்க்க