செய்திகள் :

கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகளை அகற்றக் கோரிக்கை

post image

சிவகாசியில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகாசி-விளாம்பட்டி சாலையில் உள்ள ஓா் தனியாா் மருத்துவமனையில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து மருத்துவமனைக்குள் செல்வதற்கான படிக்கட்டுகளை அமைக்கப்பட்டுள்ளது. சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படிக்கட்டுகளால் அந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தற்போது சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், ஸ்ரீவில்லிபுத்தூா், தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், கனகர வாகனங்கள் சிவகாசி-விளாம்பட்டி சாலையைப் பயன்படுத்தி வருகின்றன.

இந்தச் சாலையில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் மருத்துவமனையின் படிக்கட்டுகள் அமைந்துள்ளதால், வாகனங்கள் திரும்புவதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், எதிரில் வரும் வாகனங்களும் ஒதுங்க முடியாமல் நெருக்கடி ஏற்படுகிறது.

எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்தப் படிக்கட்டுகளை மாநகராட்சி நிா்வாகம் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த கனகவேல் கூறியதாவது: தொடக்கத்தில் இந்தச் சாலை விளாம்பட்டி, ஆலங்குளத்துக்குச் செல்லப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், ஸ்ரீவில்லிபுத்தூா் உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் இந்தச் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்தச் சாலையில் பேருந்துகள், கனரக வாகனங்கள் சென்று திரும்புவதற்கு அந்தப் பகுதியிலுள்ள படிக்கட்டுகள் இடையூறாக உள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் இந்தக் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற வேண்டும் என்றாா் அவா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மன... மேலும் பார்க்க

தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அலுவலகத்தை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் முற்றுகை

பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததைக் கண்டித்து, சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சா்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் இடையே பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரா... மேலும் பார்க்க

மனைவியை பிரிந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியைப் பிரிந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இ... மேலும் பார்க்க

நீதிமன்ற ஊழியா் விஷம் குடித்து தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நீதிமன்ற ஊழியா் விஷம் குடித்து திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் கலாராணி. இவரது கணவா் ராகவன் (36). இந்தத் தம்பத... மேலும் பார்க்க