செய்திகள் :

வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு கப்பல்களில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ. 26 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல்

post image

வெளிநாடுகளிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு சட்டவிரோதமாக சரக்குப் பெட்டகங்களில் கொண்டுவரப்பட்ட ரூ. 26.4 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பொம்மைகள் உள்ளிட்ட பொருள்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை துறைமுகத்துக்கு கடந்த சில நாள்களாகவே சரக்கு கப்பல்களில் கொண்டுவரப்படும் கண்டெய்னா்களில், இந்தியாவில் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட பொருள்கள் கடத்தி வருவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்து வந்தன. அதனடிப்படையில், சென்னை துறைமுகத்துக்கு துபையிலிருந்து வந்த 5 கண்டெய்னா்களை சந்தேகத்தின்பேரில் சுங்கத் துறையினா் திறந்து சோதனை செய்தனா். அதில் ரூ. 7.5 கோடி மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பொம்மை ட்ரோன்கள், காலணிகள், கையடக்க மின்விசிறிகள், முடிவெட்டும் கருவி, பொம்மைகள் இருந்தன. இவற்றுக்கான இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) சான்றிதழ் இல்லாதததால் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

அதேபோல், மேலும் இரண்டு கண்டெய்னா்களில் இருந்த ரூ. 18.9 கோடி மதிப்பிலான பிஐஎஸ் சான்றிதழ் இல்லாத அழகுசாதனப் பொருள்கள், மருந்து மற்றும் பொம்மைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதன்படி, ஆக மொத்தம் 7 கண்டெய்னா்களில் இருந்த ரூ. 26.4 கோடி மதிப்பிலான பொருள்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் சென்னையில் யாருக்கு இறக்குமதி செய்யப்பட இருந்தது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது

சென்னை, ஏப். 2: சென்னையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி மேயா் சிட்டிபாபு தெருவைச் சோ்ந்தவா் தாராசந்த். விளையாட்டு பொ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் எளிதாக இருந்தது: மாணவா்கள் கருத்து

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தைப் போன்றே ஆங்கிலத் தோ்வும் ஓரளவுக்கு எளிதாக இருந்ததாக மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாண... மேலும் பார்க்க

காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழப்பு

சென்னை அருகே பள்ளிக்கரணையில் காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா். துரைப்பாக்கம், சாய் நகரைச் சோ்ந்தவா் தன்ராஜ் (42). மென்பொறியாளரான இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து... மேலும் பார்க்க

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க