செய்திகள் :

பட்ஜெட்: தமிழகத்தில் 9 புதிய தொழிற்பேட்டைகள்! எந்தெந்த பகுதிகள்?

post image

அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 14) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அப்போது பேசிய அவர்,

"தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும். 30 இடங்களில் ஒரு மையத்துக்குத் தலா ரூ.5 கோடி ஒதுக்கீடு.

ரூ. 50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் தொடங்கப்படும்

விண்வெளித் தொழில்நுட்பத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

இதையும் படிக்க | மகளிருக்கான அறிவிப்புகள்! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன்!

ரூ. 366 கோடியில் 9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் - திருமுடிவாக்கம், விழுப்புரம் - சாரம், நாயக்கனூர், கரூர் - நாகம்பள்ளி, திருச்சி - சூரியூர், மதுரை - கருத்தபுளியம்பட்டி, ராமநாதபுரம் - தனிச்சியம், தஞ்சாவூர் - நடுவூர், திருநெல்வேலி - நரசிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலமாக 17,500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன் மூலமாக 5,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ரூ. 250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா அமைப்பதன் மூலமாக 20,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்" என்றார்.

இதையும் படிக்க | பட்ஜெட்: சென்னை வேளச்சேரியில் 3 கிமீ தூரத்துக்கு புதிய மேம்பாலம்!

தில்லி வந்தடைந்தார் நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர்!

நேபாள நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அர்ஸு ரானா டியூபா இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்தியவில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளியுறவுத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

பாகிஸ்தான் நாட்டின் இந்து மக்களினால் ஹோலி பண்டிகை கடூம் பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்களை பராமரிக்கும் எவாக்யூ டிரஸ்ட் பிராப்பர்ட... மேலும் பார்க்க

ஹோலி: தன் மீது சாயம் பூசியதை எதிர்த்த இளைஞர் கொலை!

ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் தன் மீது சாயம் பூசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தௌஸா மாவட்டத்தின் ரல்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (வயது 25) என்ற இளைஞர் கடந்த மா... மேலும் பார்க்க

சிரியாவின் மின்சார உற்பத்திக்கு உதவும் கத்தார்!

சிரியாவின் மின்சார உற்பத்திக்காக கத்தார் நாடு இயற்கை எரிவாயு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாடுகளை சரிசெய்ய கத்தார் நாட்டிலிருந்து நாளொன்றுக்கு 2 மில்லியன்... மேலும் பார்க்க

ஹிஜாப் விவகாரத்தில் செயலி, சிசிடிவி, டிரோன் மூலம் கண்காணிக்கும் அரசு: ஐநா அறிக்கை!

ஹிஜாப் விவகாரத்தில் அந்நாட்டுப் பெண்களை நவீன முறைகளில் ஈரான் அரசு கண்காணிப்பதாக ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டில் பெண்கள் கட்டாயம் தலையை மறைத்து ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது... மேலும் பார்க்க

ரூபாய் குறியீடு நீக்கம்: கருணாநிதி உருவம் பொறித்த நாணயங்களை திமுக வீசி எறிந்துவிடுமா? - அன்புமணி

தமிழக நிதிநிலை அறிக்கை இலச்சினையை ரூபாய் குறியீட்டை திமுக அரசு நீக்கியுள்ளதற்கு, கருணாநிதி உருவம் பொறித்த நாணயங்களை திமுக வீசி எறிந்துவிடுமா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.... மேலும் பார்க்க