செய்திகள் :

பரமக்குடி: இருசக்கர வாகனத்தில் ராங் ரூட்டில் வந்த இளைஞர்கள்; கார் மோதி பலியான சோகம்

post image

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிபவர் வினோதினி பிரியா. இவர் கோவையில் உள்ள தனது குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு, சனிக்கிழமை இரவு மதுரை - ராமேஸ்வரம் நான்குவழிச் சாலை வழியாக காரில் ராமநாதபுரம் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது பரமக்குடி அருகே உள்ள வாகைகுளம் நான்குவழிச் சாலை பாலத்தில் ராங் ரூட்டில் இருசக்கர வாகனத்தில் இரு இளைஞர்கள் வந்துள்ளனர். இதனால் நிலை தடுமாறிய மருத்துவர் வினோதினி பிரியாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இளைஞர்களின் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

விபத்தில் சிக்கிய காரும் - டூவீலரும்
கட்டுபாட்டை இழந்த கார்

இதில் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த குமாரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (24) மற்றும் பரமக்குடி சந்தை கடைத் தெருவைச் சேர்ந்த லோகநாதன் (25) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பரமக்குடி நகர் காவல்துறை, சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் இருவரின் உடலையும் மீட்டு உடல்கூறு ஆய்விற்கு அனுப்பினர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவறான பாதையில் பயணித்து விபத்தில் சிக்கி வாலிபர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பரமக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

இந்தியாவில் தொடரும் ரயில் விபத்துகள் - உண்மையான குற்றவாளி யார் தெரியுமா?

இந்தியாவில் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக ரயில் விபத்துகள் மாறிவிட்டன. சமீபத்தில் சென்னை அருகே கவரப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்துக்குப் பிறகு, அஸ்ஸாமிலும், மும்பையிலும் ரயில்கள் தடம்புரண்டிருக்கின்றன... மேலும் பார்க்க