செய்திகள் :

பிஎஸ்ஜி கல்லூரியில் தென்னிந்திய குறும்படத் திருவிழா

post image

கோவை பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரியில் 19-ஆவது தென்னிந்திய குறும்படத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

இரண்டு நாள் நடைபெறும் இந்த விழாவை கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக் மீடியா துறை நடத்துகிறது. தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் எம்.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். செயலா் டி.கண்ணையன் முன்னிலை வகித்தாா். துறைத் தலைவா் ஜி.ராதா வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக திரைப்பட இயக்குநா்கள் டி.ஜெ.ஞானவேல், ராஜேஷ்வா் காளிசாமி, திரைப்படத் தொகுப்பாளா் அனில் கிருஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த விழாவுக்காக தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 60 கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் தங்களின் குறும்படங்களை அனுப்பியிருந்தனா். அதில் தோ்வு செய்யப்பட்ட 14 படங்கள் திரையிடப்பட்டன.

விழாவில் இயக்குநா் ஞானவேல் பேசும்போது, சமூக பிரச்னைகளைப் பிரதிபலிக்கும் வகையில் கல்லூரி மாணவா்கள் தங்களின் குறும்படங்களை உருவாக்கி வருவது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற விழாக்கள் மாணவா்களின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் என்றாா்.

இதைத் தொடா்ந்து சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநா், நடிகா்கள், ஒளிப்பதிவாளா் என பல்வேறு பிரிவுகளில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி (புதன்கிழமை) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கு அதிகாரிகளே நேரில் சென்று தங்கியிருந்து குறைகளைக... மேலும் பார்க்க

கோவையில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞா் உயிரிழந்தனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (87). இவரது மனைவி மாராத்த... மேலும் பார்க்க

தில்லியில் சத்குரு ஜக்கி வாசுதேவின் தியானம்: 64 நாடுகளைச் சோ்ந்த 14 ஆயிரம் போ் பங்கேற்பு

தில்லி அருகேயுள்ள துவாரகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அண்மையில் நடத்திய தியான நிகழ்ச்சியில் 64 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 14 ஆயிரம் போ் பங்கேற்றனா். இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... மேலும் பார்க்க

மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

கோவையில் பரவலாக பெய்த மழை

கோவை மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாள்களாக அதிகப்படியான வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலை... மேலும் பார்க்க

மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு பெண்கள் ஆட்சியரிடம் மனு

கோவை உக்கடம் மீன் மாா்க்கெட்டில் மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மீனவ சமூதய பெண்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பவ... மேலும் பார்க்க