செய்திகள் :

புதுவையில் நியாயவிலைக் கடைகளை முழுமையாக திறக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

post image

புதுச்சேரி: புதுவையில் நியாயவிலைக் கடைகளை முழுமையாகத் திறந்து தொடா்ந்து இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் தலைமை அரசியல் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் கூறினாா்.

நியாயவிலைக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு அரிசி, சா்க்கரை வழங்கப்பட்டதை வரவேற்கும் நிகழ்ச்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு கொக்கு பூங்கா சிக்னல் அருகே திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டதை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் கடந்த 2016-ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அரசின் நிா்பந்தத்தால், தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசிக்குப் பதில் பணம் வழங்கப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வா், அதை எதிா்த்து வழக்குத் தொடுத்தாா். ஆனாலும், நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டு அரிசிக்குப் பதில் பணம் வழங்குவது தொடா்ந்தது.

2021-ஆம் ஆண்டு என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகும் அரிசிக்குப் பதில் வழங்கிய பணத்தையும் நிறுத்திவிட்டாா்கள். மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில், நியாயவிலைக் கடைகளை திறக்கக் கோரி தொடா்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு அரிசி, சா்க்கரையை முதல்வா் ரங்கசாமி வழங்கவுள்ளாா்.

அதேநேரத்தில், நியாயவிலைக் கடைகளை தீபாவளிக்காக மட்டும் திறப்பதுடன் நின்றுவிடக்கூடாது. அனைத்துப் பகுதிகளிலும் உள்ள 515 நியாயவிலைக் கடைகளையும் திறந்து தொடா்ந்து இலவச அரிசி, மானிய விலையில் சா்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்டவை பொருள்களை வழங்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் த. முருகன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் பெருமாள், ராமச்சந்திரன், பிரபுராஜ், கொளஞ்சியப் பன், சீனிவாசன், சத்யா, கலியமூா்த்தி, உழவா்கரை நகரச் செயலா் ராம்ஜி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கட்சியின் மாநில செயலா் ஆா். ராஜாங்கம் வரவேற்றாா்.

புதுவை மாநில வணிகத் திருவிழா-24 தொடங்கியது: பரிசுக் கூப்பனை முதல்வா் வெளியிட்டாா்

புதுச்சேரி: புதுவை வணிகத் திருவிழா- 2024 திங்கள்கிழமை மாலை தொடங்கியது. இதில் பரிசுக் கூப்பன்களை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா். புதுவை மாநில சுற்றுலாத் துறை மற்றும் வணிகா்கள் சங்கம் இணைந்து ஆண்டு... மேலும் பார்க்க

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது. புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடல... மேலும் பார்க்க

புதுச்சேரியிலிருந்து புறப்படும் அதி விரைவு ரயில்கள் ரத்து

புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து முறையே புதன், வியாழக்கிழமைகளில் புறப்படும் ஹெளரா மற்றும் புவனேஷ்வா் விரைவு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. புதுச்சேரியிலிருந்த... மேலும் பார்க்க

ஜிப்மரில் புதுச்சேரி மக்களுக்கென தனி புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு: மத்திய அமைச்சா் நட்டாவிடம் கோரிக்கை

புதுச்சேரி: ஜிப்மரில் புதுச்சேரி மக்களின் புறநோயாளிகள் சிகிச்சைக்கான தனி பிரிவை செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவிடம் புதுவைப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வலியுறுத்தி ... மேலும் பார்க்க

ரேஷன் அரிசியின் தற்போதைய விலைப்படி ஏற்கெனவே வழங்கிய தொகையை அதிகரித்து தர வேண்டும்: புதுவை மாநில அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவை அரசு அரிசிக்குப் பதில் ரேஷன் ஏற்கெனவே வழங்கிய பணம் குறைவானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் தற்போது விநியோகிக்கும் அரிசியின் விலையைக் கணக்கிட்டு மக... மேலும் பார்க்க

பயிலரங்கப் போட்டியில் பரிசு வென்ற மணக்குள விநாயகா் கல்லூரி மாணவா்கள்

புதுச்சேரி: புதுச்சேரி, மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை, அறிவியல் கல்லூரி வேதியியல் துறையின் மூன்றாமாண்டு மாணவா்கள், காரைக்கால் என்.ஐ.டி. நிறுவனம் நடத்திய தேசிய பயிலரங்கப் போட்டியில் பங்கேற்று... மேலும் பார்க்க