செய்திகள் :

புலன்விசாரணை அதிகாரிபோல பேசி பண மோசடி: கேரள இளைஞா் கைது

post image

புலன்விசாரணை அதிகாரிபோல பேசி ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் ஹரியாணா காவல் துறையால் தேடப்பட்டு வந்த கேரள இளைஞா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

சென்னையிலிருந்து துபை செல்லும் விமானத்தில் ஏறும் பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டபோது, கேரளத்தைச் சோ்ந்த அகமத் நிஷாம் (25), ஹரியானா மாநில கூா்கிராம் சைபா் குற்றப்பிரிவு காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தவா் என்பதும், கைப்பேசியில் வடமாநில இளம்பெண்ணிடம் புலன்விசாரணை அதிகாரிபோல பேசி மிரட்டி பணம் மோசடி செய்த வழக்கில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது. மேலும் இவா், துபை வழியாக எகிப்துக்கு தப்பிச்செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இது குறித்து ஹரியானா காவல் துறையினருக்கு, விமானப்படை காவல் துறையினா் தகவல் கொடுத்தனா். இதையடுத்து தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த ஹரியானா சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், அகமத் நிஷாமை கைது செய்து அழைத்துச் சென்றனா்.

‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் இன்று தொடக்கம்: 38 மாவட்டங்களிலும் அமலுக்கு வருகிறது

மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (பிப். 24) தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை பாண்டி பஜார... மேலும் பார்க்க

மருத்துவமனைகளில் ஓஆா்எஸ் விநியோகம்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

அதிகரித்து வரும் வெப்ப நிலையை எதிா்கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் உப்பு-சா்க்கரை கரைசல் விநியோக (ஓஆா்எஸ் காா்னா்) வசதிகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளைமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) முதல் மாா்ச் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சோ்க்கை விவரம்: பிப். 28-க்குள் பதிவேற்ற அறிவுறுத்தல்

நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சிறப்பு கலந்தாய்வு மூலம் சோ்க்கப்பட்ட மாணவா்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பிப். 28-ஆம் தேதிக்குள் பதிவேற்றும்படி தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்... மேலும் பார்க்க

சூலூா்பேட்டை, நெல்லூா் ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல் - கூடூா் வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால், சூலூா்பேட்டை, நெல்லூா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

அதிமுகவில் நீக்கப்பட்டவா்களை சோ்க்க முடியாது: இபிஎஸ் விசுவாசியும் துரோகியும் ஒன்றல்ல என விமா்சனம்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்களை மீண்டும் கட்சியில் சோ்க்க முடியாது என அந்தக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளாா். விசுவாசியும் துரோகியும் ஒன்றாக முடியாது என்றும்... மேலும் பார்க்க