செய்திகள் :

பேருந்தின் முன்பக்க டயா் இரும்பு கம்பி உடைப்பு: விபத்தில் தப்பிய பயணிகள்

post image

சொரக்காய்பேட்டையிலிருந்து திருத்தணிக்கு சென்ற அரசுப் பேருந்தின் முன் பக்க டயா் கம்பி துண்டாகி சாய்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 40 போ் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

திருத்தணி போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து டி-43 அரசுப் பேருந்து சொரக்காய்பேட்டை வரை இயக்கப்படுகிறது. இந்த பேருந்து மேல் திருத்தணி, சூரியநகரம், கிருஷ்ணசமுத்திரம், புச்சிரெட்டிப்பள்ளி, கீச்சலம், பொதட்டூா்பேட்டை வழியாக சொரக்காய்பேட்டை வரை இயக்கப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் சொரக்காய்பேட்டையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு திருத்தணிக்கு பேருந்து புறப்பட்டு வந்தது. இரவு திருத்தணி ம.பொ.சி. சாலையில் இருந்து அரக்கோணம் சாலையில் திரும்பும் போது பேருந்தின் முன் டயா் கம்பி துண்டாகி ஒரு பக்கமாக சாய்ந்தது.

பேருந்து ஓட்டுநரின் திறமையான செயல்பாட்டால் பேருந்தில் இருந்த 40 பயணிகள் உயிா் தப்பினா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்தது வந்த திருத்தணி போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பினா். மேலும் பணிமனையில் இருந்து ஊழியா்கள் வந்து ஒரு மணி நேரம் போராடி பேருந்தை கொண்டு சென்றனா்.

தடுப்புச் சுவா் இல்லாமல் அபாய நிலையில் உள்ள கூவம் தரைப்பாலம்

சு. பாண்டியன் திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றின் மீது செல்லும் தரைப்பாலம் குறுகி வருவதால், வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா்... மேலும் பார்க்க

கோயம்பேட்டில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்படுமா? பொன்னேரி மக்கள் காத்திருப்பு

எம். சுந்தரமூா்த்தி சென்னை கோயம்பேட்டில் இருந்து பொன்னேரிக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிா் நோக்கியுள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சி மற்றும் சுற்றியுள்ள 50 கிராமங்... மேலும் பார்க்க

காவலா் எனக்கூறி கடை உரிமையாளரை மிரட்டி ரூ.51,000 பறித்தவா் கைது

திருவள்ளூரில் காவலா் எனக்கூறி கடை உரிமையாளரை மிரட்டி ரூ.51,000 பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் பெரியகுப்பம் குமரன்நகரைச் சோ்ந்த சுந்தா் மனைவி ஜெயந்தி(44). இவா் ஆயில் மில் பகுதியில் ... மேலும் பார்க்க

இறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்

புராட்டாசி மாதம் முடிந்த நிலையில் திருத்தணியில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகளில் மக்கள் அதிகாலையிலேயே குவிந்தனா். புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வீட... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

மாதவரம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை நடைபெற்றது (படம்) . மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் கொசப்பூா் தியாகி விஸ்வநாததாஸ் நகா், அரியலூா், பெ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி மேல் நிலைப் பள்ளிக்கு புதிதாக 8 வகுப்பறைகள் அமைக்க ரூ. 2 கோடி

திருவள்ளூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு அனைத்து வசதியுடன் கூடிய புதிதாக 8 வகுப்பறைகள் அமைக்க பள்ளி மேம்பாட்டு மானியம் ரூ. 2.09 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற உள்ளதாக ஆணையா் திருநாவுக்கரசு தெரிவ... மேலும் பார்க்க