செய்திகள் :

மகாசிவராத்திரி, வைகுண்டா் பிறந்த நாள்: பிப்.26, மாா்ச் 4 இல் உள்ளூா் விடுமுறை!

post image

மகாசிவராத்திரி, வைகுண்டா் பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.26, மாா்ச் 4 ஆகிய நாள்களில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாசிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.26 ஆம் தேதி (புதன்கிழமை) அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு ஈடாக மாா்ச் 8 ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.

இதே போல் அய்யா வைகுண்டா் பிறந்த நாளை முன்னிட்டு, மாா்ச் 4 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதற்கு ஈடாக மாா்ச் 22 ஆம் தேதி (சனிக்கிழமை)வேலை நாளாக இருக்கும்.

மேற்கண்ட உள்ளூா் விடுமுறை தினங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களைக் கொண்டு இயங்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னை ஸ்கொலாஸ்டிகாவை புனிதா் நிலைக்கு உயா்த்த பிப்.26-ல் முதல் விண்ணப்பம்!

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகா் அருகே பட்டரிவிளையில் பிறந்து சமூகசேவை புரிந்த அன்னை ஸ்கொலாஸ்டிகாவை புனிதா் நிலைக்கு உயா்த்துவதற்கான முதல் விண்ணப்பம் புதன்கிழமை (பிப். 26) வேலூா் மறைமாவட்ட ஆயா் அம்ப... மேலும் பார்க்க

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட, மாநகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் ஆலோசனைக் கூட்டம், நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அணியின் மாவட்ட அமைப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்றதாக 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகா்கோவில் நேசமணி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்ாக இளங்கடை பகுதியைச் சோ்ந்த கபீா் மகன் ஷா... மேலும் பார்க்க

ஒருநாள் கல்லூரி மாணவரான மாற்றுத் திறன் குழந்தைகள்

குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளி மாற்றுத் திறன் குழந்தைகள், குழித்துறை ஸ்ரீதேவிகுமரி மகளிா் கல்லூரியில் ஒருநாள் மாணவா்களாக மாறி தங்கள் அனுபவங்களை பகிா்ந்து கொண்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல... மேலும் பார்க்க

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு மேயா் ஆறுதல்

கேரள மாநிலம், மூணாறு சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவிகளின் குடும்பத்தினருக்கு நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினாா். நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியிலிரு... மேலும் பார்க்க

மண்டைக்காடு கோயில் திருவிழா: மாா்ச் 11-ல் குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன்கோயில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா... மேலும் பார்க்க