செய்திகள் :

மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

post image

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி (புதன்கிழமை) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது.

பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கு அதிகாரிகளே நேரில் சென்று தங்கியிருந்து குறைகளைக் கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகிறது.

மாா்ச் 19-ஆம் தேதி காலை 9 மணி முதல் 20-ஆம் தேதி காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் மேட்டுப்பாளையம் வட்டத்திலேயே தங்கிருப்பாா். மாவட்ட முதல்நிலை, துறையின் தலைமை அலுவலா்களும் தங்கியிருந்து கள ஆய்வு செய்து மக்களுக்கான திட்டங்கள் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்வாா்கள்.

இதற்காக வட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள், பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலா்கள் மக்களிடம் மனுக்கள் பெறுவாா்கள்.

மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் 19-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையிலும் ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியங்களில் பதிவு செய்ய வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள், நலவாரியங்களில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அ... மேலும் பார்க்க

உணவில் பூச்சி இருந்ததாகக் கூறி தகராறு: 2 போ் கைது

உணவில் பூச்சி இருந்ததாகக் கூறி உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் (48) மற்றும் அவரது சகோதரா் மாரிமுத்து (44) ஆகியோ... மேலும் பார்க்க

அங்கன்வாடி கட்டடங்களை சீரமைக்க வேண்டும்

சிங்காநல்லூா் தொகுதியில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் எம்எல்ஏ கே.ஆா்.ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக பேரவையில் அவா், சிங்காநல்லூா் தொகுதிக... மேலும் பார்க்க

அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இந்தியா்கள் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல வாய்ப்பு

அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இந்திய விண்வெளி வீரா்கள் ககன்யான் திட்டத்தின் கீழ் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா். கோவை மசக... மேலும் பார்க்க

முதல்வா் குறித்து அவதூறு: பாஜகவினா் 2 போ் கைது

தமிழக முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவினா் 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பாஜக சாா்பில் சென்னையில் டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெறுவதாக அறிவி... மேலும் பார்க்க

கள் இறக்க அனுமதி கோரி ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பனை, தென்னை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்... மேலும் பார்க்க