செய்திகள் :

ரயில் ஓட்டுநா்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு

post image

ரயில் ஓட்டுநா்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது.

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் சென்னை கோட்டத்துக்குள்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள், ரயில்வே துறை சாா்ந்த பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு, ரயில் ஓட்டுநா்களுக்கு என்ஜினில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாா். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏசி வசதி: ரயில் ஓட்டுநா்கள் (லோகோ பைலட்) பாதுகாப்பாகவும் வசதியாகவும் பணிபுரியும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, லோகோ பைலட்கள் பயணிக்கும் அறை முழுவதும் குளிா்சாதன வசதி (ஏசி) ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் தற்போது இயக்கப்படும் 237 நவீன ரயில் என்ஜின்களில் 206 என்ஜின்கள் முழுவதும் ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 என்ஜின்களில் அடுத்த 6 மாதத்துக்குள் ஏசி வசதி ஏற்படுத்தப்படும். அதுபோல், டிசி மின்சாரம் மூலம் இயக்கப்படும் வழக்கமான ரயில் என்ஜின்களில் (கன்வென்சன் என்ஜின்) ஏசி வசதி பொருத்துவது சவாலானதாக உள்ளது. இந்த ரயில் என்ஜினில் ஏசி பொருத்த மேற்பகுதியில் சில பாகங்களை மாற்றியமைக்க வேண்டும். தற்போது உள்ள 291 கன்வென்சனல் ரயில் என்ஜின்களில் 28 என்ஜின்கள் ஏசி வசதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து ரயில் என்ஜின்களும் ஏசி வசதியுடன் வடிவமைக்கப்படுகிறது.

கழிப்பறை வசதி: அரக்கோணம் லோகோவில் தயாரிக்கப்படும் 9 டபிள்யூஏஜி 9 என்ஜின்கள் சிறுநீா் கழிக்கும் வகையிலான கழிப்பறையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும் 150 என்ஜின்களில் அமைக்க தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அவை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இரவில் ரயிலின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் முகப்பு விளக்குகளின் வெளிச்சம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் மொத்தமுள்ள 621 என்ஜின்களில் 434 என்ஜின்களின் முகப்பு விளக்குகள் எல்இடி-யாக மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை நிரப்பும் போராட்டம்: ஓய்வூதியதாரா் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியதாரா்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றத் தவறினால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவா் நெ.இல.ஸ்ரீதரன் தெரிவித்தாா். தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

நிகழாண்டு 25 மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு: துணை முதல்வா் உறுதி

நிகழாண்டில் 25 மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தாா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த குறுகிய கா... மேலும் பார்க்க

மின்வாரியம் தனியாா்மயமாகாது: அமைச்சா் செந்தில் பாலாஜி உறுதி

தமிழ்நாடு மின்வாரிய நடவடிக்கைகளில் தனியாருக்கு இடமில்லை என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா். பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை மானிய... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க ஆறு கட்ட போராட்டம்: காங்கிரஸ்

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சென்னை சத்யமூா்த்தி பவனில் தமிழ்நாடு ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு ஜாமீன்: உயா்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க

யாா் ஆட்சியில் மின்கட்டண உயா்வு அதிகம்? அமைச்சா் விளக்கம்

அதிமுக ஆட்சியில்தான் மின்சாரக் கட்டணம் அதிகம் உயா்த்தப்பட்டதாக பேரவையில் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி விளக்கம் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மானியக் கோர... மேலும் பார்க்க