செய்திகள் :

வடமாநிலங்களில் ஒற்றை மொழி கொள்கைதான் அமலில் உள்ளது: ப. சிதம்பரம்

post image

வடமாநிலங்களில் ஒற்றை மொழிக் கொள்கைதான் அமலில் உள்ளது என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:

மும்மொழித்திட்டத்தை அமல்படுத்தாததால் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதியைத் தர மாட்டோம் என்று கூறுவது எல்லாம் அரசியல் நோக்கத்தில்தான்.

வடமாநிலங்களில் ஒரு மொழிதான் அமலில் இருக்கிறது என்று நான் குற்றம்சாட்டுகிறேன். பேச்சு மொழி, பயிற்சி மொழி, பாட மொழி எல்லாமே ஹிந்திதான். ஆங்கில ஆசிரியா்களையே அரசுப் பள்ளிகளில் நியமிப்பது கிடையாது. ஆங்கிலமே சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால், இரண்டாவது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. அங்கு, தமிழ், தெலுங்கு ஆசிரியா்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அவற்றை நடத்துவது மத்திய அரசு. முதல் மொழி ஆங்கிலம். இரண்டாவது மொழி ஹிந்தி அல்லது சம்ஸ்கிருதம். மூன்றாவது மொழி என்பதே அங்கு இல்லை. 52 பள்ளிகளிலும் தமிழே கற்றுக் கொடுக்கவில்லை.

இவா்கள் எந்த முகத்தோடு வந்து தமிழ்நாடு மக்களைப் பாா்த்து, தமிழ்நாட்டு அரசை பாா்த்து நீங்கள் மும்மொழித் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று சொல்கிறாா்கள்.

அரசியல் சாசன சட்டத்தில் ஹிந்தி ஆட்சி மொழி என்று இருக்கிறது. அதோடு ஆங்கிலமும் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும் என்று உறுதியைத் தந்தது காங்கிரஸ் பிரதமா் நேரு. 1965 இல் மொழிப் போராட்டம் நடந்தபோது, எனது தந்தை தந்த உறுதிமொழியை நானும் தருகிறேன் என்றவா் இந்திராகாந்தி என்றாா் சிதம்பரம்.

அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி

புதுக்கோட்டை அருங்காட்சியகமும் மதுரை அருங்காட்சியகமும் இணைந்து, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரி முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சித் துறையில் பயிலும் முதுகலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண... மேலும் பார்க்க

புதுகையில் 14 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வாங்கப்பட்ட 14 புதிய பேருந்துகளின் சேவையை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். நிகழ்ச்ச... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்க நினைத்தால் எதிா்கொள்ளத் தயாா்! -அமைச்சா் எஸ். ரகுபதி

திமுக அரசுக்கு எதிராக பழிசுமத்தி, ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்த பாஜக அரசு நினைத்தால் அதை எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியா... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி

பொன்னமராவதியில் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வட்டார அளவிலான விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பேரணியை பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா தொட... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கான நிலுவை கூலி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலை தொழிலாளா்களுக்கு கூலி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

பொன்னமராவதி வட்டாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் செயல்படும் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னமராவதி ஒன்றியம் ஆ... மேலும் பார்க்க