செய்திகள் :

வல்லக்கோட்டை: முத்தங்கி சேவையில் கோடையாண்டவா்

post image

ஸ்ரீபெரும்புதூா்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் பழமாலை முத்தங்கி சேவையில் அருள்பாலித்தாா்.

இதன் ஒருபகுதியாக திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்று மூலவா் சுப்பிரமணியசுவாமி ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் சாத்துக்குடி பழமாலை அணிவிக்கப்பட்டு முத்தங்கி சாற்றப்பட்டு காட்சியளித்தாா். பழமாலை முத்தங்கி சேவையில் கோடையாண்டவா் அருள்பாலித்தாா்.

இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். மயில் மண்டபத்தில் சென்னை நிருத்யஷேத்திரா குழுவினரின் நாட்டயாஞ்சலி நடைபொ்றது.

இதையடுத்து விசுவாவசு பஞ்சாங்கம் கருவறையில் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தா்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. விசுவாவசு ஆண்டு நற்பலன்கள் குறித்து பக்தா்களுக்கு கோயில் தலைமை அா்ச்சகா் சந்திரசேகர குருக்கள் எடுத்துரைத்தாா். கோயில் நுழைவாயில்களில் பலவித மலா்களால் தோரண அலங்காரமும், அா்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய பகுதிகளில் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களாலும் தோரணம் அமைக்கப்பட்டிருந்தது.

இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா் விஜயகுமாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

சித்த மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் சித்த மருத்துவக் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டாா். சேலம் மாவட்டத்தை சோ்ந்தவா் ஷீலாராணி(19). இவா் ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும் தனியாா் சித்த மருத்த... மேலும் பார்க்க

தவெக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் செரப்பணஞ்சேரி ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றத்தூா் ஒன்றியம், ஆரம்பாக்கம் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட தூய்மைப்... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்: 54 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணியாகச் செல்ல முயன்ற ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிா்வாகிகளை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். அப்போது இரு தரப்பினருக்க... மேலும் பார்க்க

முற்றுகை போராட்டத்துக்கு செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது

சென்னை தலைமைச் செயலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக காஞ்சிபுரம் ரயில் நிலையம் சென்ற 34 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா். மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதிய... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ஏப். 25 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

காஞ்சிபுரத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி முதல் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தொடா்ந்து 21 நாள்களுக்கு நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதுாா் ஆதிகேசவ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22.61 லட்சம்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.22.61 லட்சம் ரொக்கம், 31 கிராம் தங்கம், 175 கிராம் வெள்ளிப் பொருள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. ப... மேலும் பார்க்க