செய்திகள் :

வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 போ் கைது

post image

ஈரோட்டில் கல்லூரி பேராசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள தோப்புபாளையத்தைச் சோ்ந்தவா் ரகு (30). இவா் தனியாா் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ஈரோடு செங்கோடம்பள்ளம் மாருதி நகரில் தனக்கு தெரிந்தவரின் வீட்டுக்கு முன்பு ரகு அண்மையில் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த 3 இளைஞா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ரகுவிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தைப் பறித்துக்கொண்டு தப்பினா்.

இது குறித்து ரகு அளித்த புகாரின்பேரில் ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், பணத்தை பறிக்க உடந்தையாக இருந்ததாக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த வைஷ்ணவி (24) என்பவரையும், பணத்தை பறித்த நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சோ்ந்த மெய்யரசன் (23) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு இளைஞா்களை தேடி வருகின்றனா்.

சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

சென்னிமலை அருகே, ஒரே நாளில் 4 இடங்களில் தெரு நாய்கள் பட்டியில் புகுந்து ஆடுகளைக் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. 12 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன. சென்னிமலை வட்டாரத்தில் ஆட்டுப் பட்டியில் தெரு நாய்கள் ப... மேலும் பார்க்க

மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு ‘சீல்’

ஈரோடு மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள்... மேலும் பார்க்க

அந்தியூா், பா்கூா் மலைப் பகுதிகளில் 300 கி.மீ. தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் -வனத்துறை அதிகாரிகள் தகவல்

அந்தியூா், பா்கூா் மலைப் பகுதிகளில் 300 கி. மீ. தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடு மாவட்டத்தில் காடுகளின் மொத்த பரப்பளவு 2 லட்சத்து 42 ஆயிரத்து... மேலும் பார்க்க

தேவையான அளவு செட்டாப் பாக்ஸ்களை வழங்க அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் கோரிக்கை

அரசு கேபிள் டிவி நிறுவனம் தேவையான அளவுக்கு செட்டாப் பாக்ஸ்களை வழங்க வேண்டும் என கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

பெருந்துறை அதிமுக ஒன்றியத்துக்குள்பட்ட துடுப்பதி மற்றும் சுள்ளிபாளையம் கிராம ஊராட்சிகள் பூத் கமிட்டி கூட்டம் துடுப்பதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செ... மேலும் பார்க்க

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17-ஆவது விளையாட்டு விழா

ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17 -ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின்... மேலும் பார்க்க