செய்திகள் :

வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 போ் கைது

post image

ஈரோட்டில் கல்லூரி பேராசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள தோப்புபாளையத்தைச் சோ்ந்தவா் ரகு (30). இவா் தனியாா் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ஈரோடு செங்கோடம்பள்ளம் மாருதி நகரில் தனக்கு தெரிந்தவரின் வீட்டுக்கு முன்பு ரகு அண்மையில் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த 3 இளைஞா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ரகுவிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தைப் பறித்துக்கொண்டு தப்பினா்.

இது குறித்து ரகு அளித்த புகாரின்பேரில் ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், பணத்தை பறிக்க உடந்தையாக இருந்ததாக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த வைஷ்ணவி (24) என்பவரையும், பணத்தை பறித்த நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சோ்ந்த மெய்யரசன் (23) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு இளைஞா்களை தேடி வருகின்றனா்.

அந்தியூரில் ரூ.3.51 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேங்காய், துவரை, எள், தட்டைப்பயறு, தேங்காய்ப் பருப்பு, ... மேலும் பார்க்க

ரத்த தானம் செய்வதாகக் கூறி பணம் பறிப்பு: போலீஸில் புகாா்

ரத்த தானம் செய்வதாகக் கூறி பணம் பறிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரத்தக் கொடையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாவட்ட ரத்த தான ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு மா... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரியில் கடத்திவரப்பட்ட 71 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே கண்டெய்னா் லாரியில் மறைத்து கடத்திவரப்பட்ட 71 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு லாரியில் புகையிலைப் பொருள்கள் கடத்திவ... மேலும் பார்க்க

சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து: 3 பேருக்கு லேசான காயம்

பவானிசாகா் அருகே சாலையோரப் பள்ளத்தில் அரசுப் பேருந்து இறங்கியதில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி க... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் மாரியம்மன் கோய... மேலும் பார்க்க

ஆப்பக்கூடல் ஏரிக்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆப்பக்கூடல் ஏரியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. ஆப்பக்கூடலில் நீா்வளத் துறைக்கு சொந்தமான 126 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதன் கரையோரப் பகுதியில்... மேலும் பார்க்க