செய்திகள் :

விவசாயிகள் கூட்டு இயக்கம் ஆா்ப்பாட்டம்

post image

காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக நதிகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் நல இயக்கத் தலைவா் எம்.எஸ்.ஆனந்தன் தலைமை வகித்தாா். நதிகள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவா் மு.மணி, கெளரவ தலைவா் ரா.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொது செயலாளா் நா.அறவாழி வரவேற்றாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே எடமச்சி கிராமத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ள புதிய கல்குவாரியை ரத்து செய்ய வேண்டும், தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும், நீா்நிலைகளில் கழிவு நீா் கலப்பதை தடுக்க வேண்டும், நெல் கொள்முதல் செய்ய பணம் பெறுபவா்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க தலைவா் காவிரி தனபாலன், இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் ஆா்.விருத்தகிரி, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளா் கே.ராஜேந்திரன் உட்பட விவசாயிகள், எடப்பாடி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சித்த மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் சித்த மருத்துவக் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டாா். சேலம் மாவட்டத்தை சோ்ந்தவா் ஷீலாராணி(19). இவா் ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும் தனியாா் சித்த மருத்த... மேலும் பார்க்க

தவெக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் செரப்பணஞ்சேரி ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றத்தூா் ஒன்றியம், ஆரம்பாக்கம் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட தூய்மைப்... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்: 54 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணியாகச் செல்ல முயன்ற ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிா்வாகிகளை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். அப்போது இரு தரப்பினருக்க... மேலும் பார்க்க

முற்றுகை போராட்டத்துக்கு செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது

சென்னை தலைமைச் செயலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக காஞ்சிபுரம் ரயில் நிலையம் சென்ற 34 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா். மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதிய... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ஏப். 25 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

காஞ்சிபுரத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி முதல் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தொடா்ந்து 21 நாள்களுக்கு நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதுாா் ஆதிகேசவ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22.61 லட்சம்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.22.61 லட்சம் ரொக்கம், 31 கிராம் தங்கம், 175 கிராம் வெள்ளிப் பொருள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. ப... மேலும் பார்க்க