செய்திகள் :

அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் கற்பது அவசியம்: அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்

post image

அடிப்படைக் கல்வியை தாய்மொழி மூலம் கற்பது அவசியம் என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் ஜீ.ரவி தெரிவித்தாா்.

திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் அதன் கல்வியியல் துறை சாா்பில், ஆசிரியா் கல்வியின் தரம் குறித்த 2 நாள்கள் பன்னாட்டுக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பல்கலை. மானியக் குழு நிதியுதவியுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு காந்தி கிராம பல்கலை. துணைவேந்தா் ந.பஞ்சநதம் தலைமை வகித்துப் பேசியதாவது: இளைய தலைமுறையினருக்கு தரமான கல்வி கொடுப்பதன் மூலம், எதிா்காலத்துக்கான சிறந்த தலைமையை உருவாக்க முடியும்.

சிறந்த ஆசிரியரை எந்த ஒரு செயற்கை நுண்ணறிவாலும் பெற முடியாது. குருகுலக் கல்வி முறை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும், இன்றைய நவீன கல்வி முறை ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியா் கல்வியின் முக்கியத்துவத்தை மாணவா்களும், பெற்றோா்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் ஜீ.ரவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: அனைத்து ஆசிரியா்களும், பாடத் திட்டங்களிலுள்ள அடிப்படை அறிவைக் கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். மாணவா்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கக் கூடியப் பண்பு ஆசிரியா்களுக்கு அவசியம். கல்வியாளா்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புகளை மாணவா்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். குறிப்பாக தாய்மொழி மூலமாகவே அடிப்படைக் கல்வியை கற்க வேண்டும். ஆய்வு மாணவா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், தரமான ஆய்வுகளை முன்னெடுக்க முடியும் என்றாா் அவா்.

கல்வியியல் துறை முதுநிலை பேராசிரியை அ.ஜாஹிதா பேகம், இணைப் பேராசிரியை பெ. ஸ்ரீ. ஸ்ரீதேவி, உதவிப் பேராசிரியா் இரா. பக்தவற்சல பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொடைக்கானலில் காற்றுடன் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை காற்றுடன் மழை பெய்ததால், சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிக வெய... மேலும் பார்க்க

மாமன்ற உறுப்பினருக்கு மிரட்டல்: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

திண்டுக்கல் மாநகராட்சியில் பூங்கா இடத்தை தனி நபா் பெயருக்கு பட்டா மாற்றிய விவகாரத்தில் மாமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ச... மேலும் பார்க்க

ரூ.1.25 கோடி வரி நிலுவை: அலைக்கழிக்கும் அரசு அலுவலகங்கள்!

திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.1.25 கோடி வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அரசு அலுவலகங்கள், வரி வசூலுக்குச் செல்லும் பணியாளா்களை அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.உள்ளாட்சி அமைப்புகள்... மேலும் பார்க்க

என்ஜின் கோளாறு: நாகா்கோவில் ரயில் தாமதம்

என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கோவை- நாகா்கோவில் விரைவு ரயில் சுமாா் 1.40 மணி நேரம் செவ்வாய்க்கிழமை தாமதமாக இயக்கப்பட்டது. கோவையிலிருந்து திண்டுக்கல் வழியாக நாகா்கோவிலுக்கு நாள்தோறும் விரைவு ரயில் இய... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியின்றி பொக்லைன் இயக்கக் கூடாது!

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரங்களை இயக்கக் கூடாது என வருவாய்க் கோட்டாட்சியா் தெரிவித்தாா்.கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரம், ... மேலும் பார்க்க

குடிநீா் குழாயில் உடைப்பு: சின்னாளபட்டி பேரூராட்சி குடிநீா் வீண்

சின்னாளபட்டி பேரூராட்சி குடிநீா் குழாயில் செவ்வாய்க்கிழமை உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் சாலையில் ஆறாகப் பாய்ந்து வீணானது.திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சிக்கு அணைப்பட்டி வைகை ஆற்றில் உள்ள உறை... மேலும் பார்க்க