பாகிஸ்தான் ரயில் சிறைபிடிப்பு: 33 பயங்கரவாதிகள் கொலை... மீட்புப் பணிகள் நிறைவு!
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.19 ஆக முடிவு!
மும்பை: கட்டண நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.19 ஆக முடிவடைந்தது.
கச்சா எண்ணெய் விலை ஏற்றம், உள்நாட்டு பங்குகள் தொடர்ந்து விற்பனை மற்றும் அந்நிய மூலதனம் வெளியேற்றம் ஆகியவை வெகுவாக பாதித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள வேளையில், இந்தியா மற்றும் அமெரிக்கா வெளியிட உள்ள மேக்ரோ பொருளாதார தரவுகளின் குறிப்பு குறித்து முதலீட்டாளர்கள் காத்திருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.24 ஆக தொடங்கி, வர்த்தக அமர்வின் போது, டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.87.17 ஆக உயர்ந்தும், வர்த்தக நேர முடிவில் 2 காசுகள் சரிந்து ரூ.87.19 ஆக நிலைபெற்றது.
நேற்று (திங்கள்கிழமை) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.87.21 ஆக இருந்தது.
இதையும் படிக்க: ஆரம்பத்தில் உயர்ந்தும், முடிவில் சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!