செய்திகள் :

Indonesia: இயேசு கிறிஸ்துவை குறிப்பிட்டு பேசிய திருநங்கை TikTok பிரபலம்; சிறைத் தண்டனை விதித்த அரசு!

post image

இயேசு கிறிஸ்துவின் முடி வெட்டுதல் குறித்து சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்ததற்காக இந்தோனேசியாவில் உள்ள நீதிமன்றம் ஒரு திருநங்கைக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது .

டிக்டோக்கில் 4,42,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட ரது தலிசா, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதற்காக நகர நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

தலிசா டிக்டோக்கில் நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டபோது ஒரு பின்தொடர்பவர் அவரது தலைமுடியை ஆண்கள் போல வெட்டிக்கொள்ளும் கேட்டார். அதற்கு பதிலளித்த தலிசா, தனது தொலைபேசியை உயர்த்தி இயேசுவின் படத்தைக் காண்பித்து, "நீங்கள் அவருடைய தந்தையைப்போல தோற்றமளிக்க உங்கள் தலைமுடியை வெட்ட வேண்டும்" என்று கூறினார். தலிசா இப்படிப் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, விவாதங்களைக் கிளப்பியது. பலரும் இத்தகைய செயலுக்குக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

மாவட்ட நீதிமன்றம், தலிசாவின் கருத்துக்கள் "பொது ஒழுங்கு" மற்றும் "மத நல்லிணக்கத்தை" சீர்குலைக்கும்படி உள்ளதாகக் கூறியிருக்கிறது.

இது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் தலிசாவுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தும், குற்றத்திற்காக £4,711 அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இந்தோனேசியாவின் நிர்வாக இயக்குநர் உஸ்மான் ஹமீத் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில், "பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டும் மத வெறுப்பைப் பரப்புவதை இந்தோனேசியா தடை செய்ய வேண்டும் என்றாலும், தலிசாவின் பேச்சு அந்த வரம்பை எட்டவில்லை" என்று கூறியிருக்கிறார். மேலும் தலிசாவின் தண்டனையை ரத்து செய்யவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இனி மாட்டுப்பாலுக்கு பதிலாக கரப்பான்பூச்சிப் பாலா? - என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?

தலைப்பைப் படித்தவுடன் அருவருப்பாக இருந்தாலும், டிப்லாப்டெரா பவுன்டேட் (Diploptera punctata) என்ற குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சிப்பாலில், பசுவின் பாலை விட மூன்று மடங்கு அதிகமான சத்திருக்க... மேலும் பார்க்க

1988-ல் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் - தற்போதைய மதிப்பு இத்தனை லட்சமா?

சண்டிகரைச் சேர்ந்த ரத்தன் தில்லான் தனது வீட்டை சுத்தம் செய்யும்போது 1988ல் வாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் குறித்த ஆவணங்களைக் கண்டுபிடித்துள்ளார்.கார் ஆர்வலரான இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் ப... மேலும் பார்க்க

கர்நாடகா: 'கம்பாலா' திருவிழா... சேறும் சகதியுமான நெல் வயல் பாதையில் சீறி பாய்ந்த எருமைகள்! | Album

கம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா திருவிழாகம்பாலா ... மேலும் பார்க்க

`யார் இந்த தண்ணீரை குடிப்பார்கள்?'- கும்பமேளாவிலிருந்து கொண்டுவந்த நீரை குடிக்க மறுத்த ராஜ் தாக்கரே!

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயக்ராஜ் நகரில் 45 நாள்கள் நடந்த கும்பமேளாவில் 65 கோடி பக்தர்கள் புனித நீராடி இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இக்கும்பமேளாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் செல்ல தவறவில்ல... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: `இளையராஜா சிம்பொனி டு ஆஸ்கர் விருதுகள்' - இந்த வார ஆட்டத்துக்கு ரெடியா!?

இளையராஜா சிம்பொனி, ஆஸ்கர் விருதுகள், சாம்பியன்ஸ் டிராபி மற்றும் பல அரசியல் நிகழ்வுகள் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள... மேலும் பார்க்க

வீட்டினுள் மனைவிக்கு ஏசியுடன் சமாதி; மறைவுக்குப் பிறகும் காதலை வெளிப்படுத்து அன்பான கணவர்!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த துறையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் தனது இறந்த மனைவி மீது கொண்ட பேரன்பின் காரணமாக வீட்டினுள் மனைவிக்குச் சமாதி அமைத்து அங்கு வாழ்ந்து வருகிறார்.கான்கிரட்... மேலும் பார்க்க