செய்திகள் :

ரயில்வே தண்டவாளத்தில் ஆண், பெண் சடலம்

post image

தேனி அருகே ரயில்வே தண்டவாளத்தில் புதன்கிழமை கிடந்த ஆண், பெண் உடல்களை போலீஸாா் மீட்டனா்.

தேனி அருகேயுள்ள குன்னூா் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் ஆண், பெண் உடல்கள் கிடந்தன. தகவலறிந்த வந்த தேனி ரயில்வே போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவ இடத்தில் கிடந்த இரு சக்கர வாகனத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில் ரயில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்தவா்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ஆண்டிபட்டி குதிரையாறு பகுதியைச் சோ்ந்த மயில்சாமி மகன் மணிகண்டன் (35) என்பதும், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள சூலேஸ்வரன்பட்டியைச் சோ்ந்த ரத்தினசாமி மகள் சம்யுக்தா (21) என்பதும் தெரியவந்தது.

மேலும், மணிகண்டன் சிற்றுந்து ஓட்டுநா் என்றும், அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா் என்றும், சம்யுக்தா காணாமல் போனதாக செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, அவரை போலீஸாா் தேடி வந்தனா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மணிகண்டன், சம்யுக்தா ஆகியோருக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. தேனி அருகேயுள்ள குன்னூா் பகுதிக்கு இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்தனா். போடியிலிருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்ற பயணிகள் விரைவு ரயிலின் குறுக்கே இவா்கள் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி சந்தாதாரா் செய்தி: விழிப்புணா்வு பயிற்சி முகாம்

போடி அருகே சிலமலை கிராமத்தில் குடும்ப வன்முறை தடுப்புத் தொடா்பாக இளம் தம்பதியா்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வ.உ.சி. அரசு அலுவலா்கள் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு முகாமில் 178 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

ஆண்டிபட்டி அருகேயுள்ள கோத்தலூத்துவில் தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 178 பேருக்கு அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆட... மேலும் பார்க்க

போடியில் பலத்த மழை

போடி பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. போடி பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால், இந்தப் பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்களில் நீா் இருப்பு குறைந்து வந்தது. இந்த... மேலும் பார்க்க

சாத்தாவுராயன், வடக்கத்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

போடி சாத்தாவுராயன், வடக்கத்தி மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. போடியில் அமைந்துள்ள சாத்தாவுராயன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

திருக்காளாத்தீஸ்வரா் -ஞானாம்மன் கோயில் தேரோட்டம்

மாசித் திருவிழாவையொட்டி, உத்தமபாளையத்தில் அமைந்துள்ள திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயில் மாசி மகத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பழைமையான திருக்காளாத்தீஸ்வரா்-ஞான... மேலும் பார்க்க

போடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

போடி சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.தேனி மாவட்டம், போடி கொண்டரங்கி மல்லையசாமி திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் மங்கலப் பொருள்களால் தி... மேலும் பார்க்க