செய்திகள் :

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்படவில்லை! சுனிதா பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்!

post image

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9 மாதங்களாக விண்ணில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், டிராகன் விண்கலம் மூலம் மார்ச் 16ஆம் தேதி பூமிக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பாகிஸ்தான் ரயில் கடத்தல்: அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை - 300 பயணிகள் மீட்பு

அமெரிக்காவின் போயிங் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது. ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. ஆனால், ஸ்டாா்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.

இதன் காரணமாக, அவர்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக பூமிக்கு அப்பால் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பாக தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவரையும் அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிராகன் விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புதன்கிழமை மாலை (உள்ளூர் நேரப்படி) ஏவப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த விண்கலத்தில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுனிதா மற்றும் பட்ச்சுக்கு மாற்றுவீரர்களாக அனுப்பப்படவிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் ஹைட்ராலிக் அமைப்பில் விஞ்ஞானிகள் கோளாறு இருப்பதை கண்டுபிடித்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

விண்ணில் ஏவப்படுவதற்கான புதிய தேதி அறிவிக்கப்படவில்லை, இருப்பினும், வியாழக்கிழமை இரவு மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான முயற்சி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவின் பிரதமராக மார்க் கார்னி நாளை பதவியேற்பு!

கனடாவின் 24-ஆவது பிரதமராக மார்க் கார்னி (59) நாளை(மார்ச் 14) பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பதவியேற்பு விழா தொடர்பான அறிவிப்பை ஆளுநர் ஜெனரல் மேரி சைமன் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. முன... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை - 300 பயணிகள் மீட்பு

கராச்சி/இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்திய அனைத்து தீவிரவாதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட பயணிகள் ... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் வழக்கு: நெதா்லாந்தில் டுடோ்த்தே!

தி ஹேக்: பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் வழக்கு விசாரணைக்காக நெதா்லாந்தின் தி ஹேக் நகருக்கு அவா்... மேலும் பார்க்க

மியான்மரில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கிய 549 இந்தியா்கள் மீட்பு

தாய்லாந்து-மியான்மா் எல்லையில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த 549 இந்தியா்கள் மீட்டு, தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஆந்திரம... மேலும் பார்க்க

30 நாள் போா் நிறுத்தத்துக்குத் தயாா்: உக்ரைன்

ஜெட்டா: ரஷியாவுடன் உடனடியாக 30 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க பிரதி... மேலும் பார்க்க

அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100% வரி: அதிபா் மாளிகை

நியூயாா்க்/வாஷிங்டன்: அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் மாளிகையின் ஊடகச் செயலா் கரோலைன் லெவிட் தெரிவித்துள்ளாா். அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி... மேலும் பார்க்க