செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ்! வலுக்கும் எதிர்ப்புகள்!!

post image

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் முழுக்க இந்துக்கள் நடத்தும் ஆட்சிறைச்சிக் கடைகளை அடையாளம் காணும் வகையில் அந்த கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கப்படும் என்று மாநில மீன் வளத்துறை அமைச்சர் நிதேஷ் ரானே அறிவித்து அதனைத் தொடங்கியும் வைத்துள்ளார். மேலும் இந்துக்கள் 'மல்ஹர்' சான்றிதழ் இல்லாத கடைகளில் இறைச்சி வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் மூலமாக இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள், இந்தக் கடைகளை எளிதாக அடையாளம் காண முடியும். இந்துக்களுக்கு விநியோகிக்கப்படுவதால் ஆட்டிறைச்சி சுத்தமாக இருக்கும், இந்துக்களின் பொருளாதாரமும் மேம்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க | புற்றுநோய்க்கு மருந்தாகிறதா காளான்? - புதிய கண்டுபிடிப்பு!

இதனிடையே இது சமூகத்தை பிளவுபடுத்தும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்து - முஸ்லீம் சமூகத்தினரிடையே பிரச்னையை ஏற்படுத்தும் என காங்கிரஸ் எம்எல்ஏ நானா படேல் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏ சஞ்சய் உபாத்யாயா கூறுகையில், 'முஸ்லீம்கள் விற்கும் 'ஹலால்' இறைச்சியில் ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது. அதனைத் தடுக்கவே, இந்துக்களுக்கு என்று பிரத்யேக கடைகளுக்கு சான்றிதழ் வழங்குகிறார்கள். அமைச்சரின் முடிவை வரவேற்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

'மல்ஹர்' சான்றிதழ் பெறுவது எப்படி?

இறைச்சிக் கடைகள்(சிக்கன், மட்டன்) நடத்தும் இந்துக்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

'ஜத்கா' முறைப்படி இறைச்சிகள் சுத்தமான, கெட்டுப்போகாததாக இருக்க வேண்டும். வேறு இறைச்சிகளின் கலப்படம் இருக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹோலி: வட மாநிலங்களில் திரையிட்டு மூடப்படும் மசூதிகள்! என்ன நடக்கிறது?

ஹோலி பண்டிகை நாளை (மார்ச் 14) கொண்டாடப்படவுள்ள நிலையில், பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டு வருகின்றன.நாடு முழுவதும் மார்ச் 1 முதல் 31 வரை ரம்ஜான் மாதமாக இஸ்லாம... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் ஒழிக! கோஷமிட்ட காந்தியின் கொள்ளுப் பேரன்! என்ன நடந்தது?

கேரளத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ், சங் பரிவார் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். கேரளத்தில் வர்க்கலாவிலுள்ள சிவகிரி மடத்தின் அழைப்பின் பேரில் ஸ்ரீ நாராயண குரு மகாத்... மேலும் பார்க்க

வினாத்தாள் கசிவு! 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, யுஜிசி நெட் தே... மேலும் பார்க்க

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது!

தில்லியில் பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தில்லியில் வசிக்கும் 24 வயதான கைலாஷ் என்ற நபருடன் சமூக வலைதளம் மூலம் இரு ... மேலும் பார்க்க

மலையை தகர்த்து ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் கட்டிய அரண்மனை!

ஆந்திர மாநிலத்தில அமைந்துள்ள ருஷிகொணடா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தரைமட்டமாக்கி, அதில் ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனையை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் கட்டியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல்: காவல்துறை கேட்டதால் நடிகைக்கு உதவி! விமான நிலைய அதிகாரி வாக்குமூலம்!

காவல்துறை கேட்டுக் கொண்டதால் நடிகை ரன்யா ராவை சோதனை செய்யாமல் விஐபி வழித்தடத்தில் செல்ல அனுமதித்ததாக விமான நிலைய அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ராவி... மேலும் பார்க்க