செய்திகள் :

சிறைப்பிடிப்பு எதிரொலி: பாக். பிரதமர் பலூசிஸ்தான் பயணம்!

post image

பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பயணம் மேற்கொள்கின்றார்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச்.11 அன்று குவேட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி சென்ற பயணிகள் ரயிலை பெரோ குன்ரி, கடாலாா் பகுதிகள் இடையே பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற தீவிரவாதக் குழு சிறைப்பிடித்தது. இந்த சம்பவத்தில் அந்த ரயிலில் பயணித்த 4 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 21 பயணிகள் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (மார்ச் 12) அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அந்த ரயிலைக் கடத்திய 33 தீவிரவாதிகளைக் கொன்று 300க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

இதையும் படிக்க: 40 ஆண்டுகளில் முதல் முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! எரிமலை வெடிக்கும் அபாயம்?

இந்நிலையில், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும், ரயில் சிறைப்பிடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிடவும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இன்று (மார்ச் 13) பலூசிஸ்தான் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் அவருடன் அந்நாட்டு துணைப் பிரதமர் முஹம்மது இஷாக் தார், தொலைத் தொடர்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்பதாகக் கூறப்படுகின்றது.

முன்னதாக, ரயில் சிறைப்பிடிப்பு மீட்பு நடவடிக்கை வெற்றி பெற்றதை அறிவித்த ராணுவ உயர் அதிகாரி ஒருவர், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் செய்ற்கை கோள் தொலைப்பேசி மூலம் ஆப்கானிஸ்தானிலுள்ள அவர்களது தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தானின் விமானப் படை, ராணுவப் படை, சிறப்பு அதிரடி படைகள் உள்ளிட்டோர் பங்குபெற்று பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றத் தயாரா? - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் நாளை(மார்ச் 14) ... மேலும் பார்க்க

திபெத்தில் தொடர் நிலநடுக்கம்...! பீதியில் மக்கள்!

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 01.42 மணியளவில் ... மேலும் பார்க்க

இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோன்கள் வீசிய போதைப் பொருள்கள் பறிமுதல்!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து கட்டுப்படுத்தப்ப... மேலும் பார்க்க

பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல்: அன்புமணி கண்டனம்!

சேலத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சென்ற பாமக எம்எல்ஏ அருள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ... மேலும் பார்க்க

கொலையில் முடிந்த ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னை: உறவினர் கைது

அவிநாசி அருகே ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னையால் வயதான விவசாய தம்பதியரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிய உறவினர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவிநாசியில் ... மேலும் பார்க்க

தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை மாற்றியுள்ளது திமுக! - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை திமுக அரசு மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,'திமுக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக... மேலும் பார்க்க