செய்திகள் :

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு!

post image

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

உதகை மற்றும் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எத்தனை சுற்றுலா வாகனங்களை இயக்க முடியும் என்பது குறித்த ஆய்வை சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த முடிவு வருவதற்கு கால தாமதம் ஆகும் என்பதால், உதகை மற்றும் கொடைக்கானலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சுற்றுலா வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு நீதிபதிகள் கட்டுப்பாடு விதித்தனர்.

இதையும் படிக்க: தமிழுக்கு முக்கியத்துவம்! தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!

அதன்படி, உதகைக்கு வார நாள்களில் 6,000 செல்லும் சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாள்களில் 8,000 சுற்றுலா வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். கொடைக்கானலுக்கு வாரநாள்களில் 4,000 சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாள்களில் 6,000 சுற்றுலா வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அரசுப் பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கொடைக்கானல் மலைப் பகுதியில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள்) கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்லத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வைகை, பல்லவன் ரயிலில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைப்பு!

வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயிலில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.மதுரை - சென்னை எழும்பூர் இடையேயான வைகை விரைவு ரயில் மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்கு... மேலும் பார்க்க

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு!

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.பார் உரிமங்கள் வழங்குவதிலும் அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. மேலும் பார்க்க

வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது: இபிஎஸ்

வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.திமுக அரசை விமர்சித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தன்னுடைய எக... மேலும் பார்க்க

மதுரையில் லாரி - பேருந்து மோதி விபத்து

மதுரையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த தனியார் பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மதுரை விமான நிலையம் அருகே வெளிப்புற வட்டச்சாலை... மேலும் பார்க்க

6ம் கட்ட தவெக மாவட்டப் பொறுப்பாளர்கள்: விஜய் நியமனம்!

தமிழக வெற்றிக் கழகத்துக்கு 6ம் கட்டமாக 19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கட்சியைப் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14.55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பொருளாதார ஆய்வறிக்கை

தமிழகத்தில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதன் மூலம் 14.55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழக அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெள... மேலும் பார்க்க