செய்திகள் :

பெனால்டியில் நடுவரின் தவறான முடிவு: ஸ்பெயின் ஊடகங்கள் கடும் விமர்சனம்..!

post image

சாம்பியன்ஸ் லீக்கில் முக்கியமான போட்டியில் பெனால்டி குறித்த முடிவு சர்ச்சையாகியுள்ளது.

சாம்பியன்ஸ் லீக்கில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அத்லெடிகோ மாட்ரிட் ரியல் மாட்ரிட் உடன் மோதியது. 1-0 என முன்னிலை வகிக்க முதல் சுற்றில் ரியல் மாட்ரிட் 1-0 என வென்றதால் இந்தப் போட்டி சமனில் முடிவடைந்தது.

பின்னர் கூடுதல் நேரம் ஒத்துக்கியும் முடிவு எட்டப்படாததால் ஆட்டம் பெனால்டிக்கு சென்றது.

என்ன சர்ச்சை?

பெனால்டியில் ரியல் மாட்ரிட் 4-2 என வென்றது. இதில் அத்லெடிகோ மாட்ரிட் அணி வீரர் ஜூலியன் அல்வராஸ் பெனால்டியில் கோல் அடித்தார்.

இந்த கோல் டபுள் டச் (இருமுறை பந்தினை தொடுதல்) ஆனதாக நடுவரின் முடிவினால் (விஏஆர்) கோல் இல்லை என தீர்மானிக்கப்பட்டது.

ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் அது ‘டபுள்-டச்’ என்றும் அத்லெடிகோ மாட்ரிட் அணி வீரர்கள் அப்படி எதுவும் இல்லை என்றனர்.

யாராவது பார்த்திருந்தால் கையை உயர்த்துங்கள்?

இந்நிலையில் அத்லெடிகோ மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் தியாகோ சியோமின் கூறியதாவது:

நீங்கள் பார்த்தீர்களா? அல்வரெஸ் பந்தினை இரண்டு முறை தொட்டாரா? பேசுவதற்கு பயமாக இருக்கிறதா? பேசினால் தண்டனை கிடைக்குமென நினைக்கிறீர்களா? பயந்தீர்களேயானால் எதுவும் பேசாதீர்கள். ஜூலியன் இரண்டு முறை பந்தினை தொட்டதை யாராவது பார்த்திருந்தால் கையை உயர்த்துங்கள் பார்க்கலாம்? யாருமில்லை தானே?

உண்மையில், நான் பொய் சொல்லவேண்டியதில்லை. இதுமாதிரி போட்டியிலிருந்து வெளியேறினால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

ஸ்பெயின் ஊடகங்கள் சொல்வதென்ன?

இடதுகால் வழுக்கிச் சென்றதே தவிர அது பந்தினை தொடவில்லை. வலதுகாலில் பந்தினை அடித்ததும் இடதுகால் பந்தினை தொடவே இல்லை. அதற்கு முன்பாகவும் பந்தினை எங்கேயும் தொடவில்லை.

ஒருவேளை, விடியோ அசிஸ்டன்ட் நடுவர் இதைவிட தெளிவான படத்தைப் பார்த்திருக்கலாம் அல்லது நடுவர் பொலிஷ் மார்சினிக் மோசமாக அறிவுரை செய்திருப்பார்.

தெளிவான படம் இல்லாமல் ஏன் இந்தமாதிரி நிலைகுலைய வைக்கும் முடிவினை கூறினார்கள் என ஸ்போர்ஷ்ட் ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது.

அசத்தல் வெற்றியுடன் காலிறுதியில் லக்ஷயா சென்

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மின்டனில், இந்தியாவின் பிரதான வீரரான லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா். ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் 15-ஆம் இடத்திலிருக்கும் லக்ஷய... மேலும் பார்க்க

இறுதிக்கு முன்னேறியது மும்பை இண்டியன்ஸ்: எலிமினேட்டரில் குஜராத்தை வெளியேற்றியது

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் எலிமினேட்டா் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 47 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது. முதலில் மும்பை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையான காதல் என்பது பொதுவுடமை படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை(மார்ச் 14) வெளியாக... மேலும் பார்க்க

நாளை திரையரங்குகளில் வெளியாகும் 10 தமிழ் படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் 10 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது. நாளை(மார்ச் 14) எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்து இருக்கும் திரைப்... மேலும் பார்க்க

பராசக்தியில் பாசில் ஜோசஃப்?

நடிகர் பாசில் ஜோசஃப் பராசக்தி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் பராசக்தி படத்தின் முதல்கட்ட ... மேலும் பார்க்க