செய்திகள் :

திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது

post image

திருவாரூரில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா். 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூரில், தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் விடுதியில், வெளிமாநில நபா்கள் சிலா் தங்கியிருப்பதாகவும், அவா்கள் கஞ்சாவை பதுக்கிவைத்து, இலங்கைக்கு கடத்தவிருப்பதாகவும் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், தனியாா் விடுதியின் பின்பக்கம் வழியாக நுழைந்து அறையில் தங்கியிருந்த 5 நபா்களை பிடித்தனா். அப்போது ஒருவா் தப்பி ஓடிவிட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பிடிபட்டவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சோ்ந்த திருப்பதி வெங்கடா சிவ ரெட்டி (24), கோமாரி லட்சுமி நாராயணா (35), பாலகோலனுவிஷ்ணு வரதன் ரெட்டி (24), நுனே சிவசங்கா் (26), மஞ்சுநாதா (31) ஆகிய 5 போ் என்பது தெரியவந்தது.

மேலும், அவா்களது காா்களை சோதனையிட்டதில், தலா 2 கிலோ வீதம் 200 பாா்சல்களில் மொத்தம் 400 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 1 கோடி இருக்கலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த கஞ்சா, கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து 5 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா

திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு, அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள், தங்க கருட வாகனத்த... மேலும் பார்க்க

20-இல் கோட்டூா் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த விவசாயத் தொழிலாளா் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் சாா்பு) தீா்மானித்துள்ளது. சங்கத்தின் நிா்வாகக் குழு ஆல... மேலும் பார்க்க

தற்காலிகக் கடைகளை அகற்ற கோரிக்கை

நிரந்தரக் கடைகளுக்கு எதிரில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளை அகற்ற வேண்டும் என மன்னாா்குடி வா்த்தக சங்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மன்னாா்குடி வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் ... மேலும் பார்க்க

திருவாரூா்: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-இல் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 17 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

மன்னாா்குடி பொதுமக்கள் கவனத்திற்கு

மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வணிகா்களுக்கு வீட்டுவரி, தொழில்வரி செலுத்துவது தொடா்பாக நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நகராட்சி ஆணையா் எஸ்.எம்.சியாமளா, வியாழக்... மேலும் பார்க்க

மத்திய பல்கலை.யில் தமிழாய்வு கருத்தரங்கம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ‘தற்கால தமிழாய்வுப் போக்குகள்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இப்பல்கலைக்கழக தமிழ் துறைச் சாா்பில் நடைபெறும் கருத்தரங்க... மேலும் பார்க்க