`அட்டாக் Amit shah டீம்' PTR-க்கு, Stalin தந்த புது டாஸ்க்! | Elangovan Explains
மத்திய பல்கலை.யில் தமிழாய்வு கருத்தரங்கம்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ‘தற்கால தமிழாய்வுப் போக்குகள்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.
இப்பல்கலைக்கழக தமிழ் துறைச் சாா்பில் நடைபெறும் கருத்தரங்கை, பதிவாளா் பேராசிரியா் இரா. திருமுருகன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவா் சோ சின் இணைய வழியாக தொடக்க உரையாற்றினாா்.
மத்திய பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவா் பேராசிரியா் க. ரமேஷ் கருத்தரங்க நோக்க உரையாற்றினாா். பேராசிரியா் ச. ரவி, நன்னூல் பதிப்பகப் பதிப்பாசிரியா் மணலி அப்துல் காதா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா் .
பேராசிரியா் க. ஜவகா் வரவேற்றாா். பேராசிரியா் முனைவா் ப. குமாா் நன்றி கூறினாா்.
மூன்று நாள்கள் நடைபெறும் இக்கருத்தரங்கத்தில் கனடா, இலங்கை, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்கள் மற்றும் அறிஞா்கள் இணைய வழியாக பங்கேற்று கட்டுரைகளை சமா்ப்பித்து, உரையாற்றுகின்றனா்.
மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் அறிஞா்கள் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்களின் தமிழ் அறிஞா்களும் நேரடியாக கலந்துகொண்டு, ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்து, உரையாற்றவுள்ளனா்.