செய்திகள் :

20-இல் கோட்டூா் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த விவசாயத் தொழிலாளா் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் சாா்பு) தீா்மானித்துள்ளது.

சங்கத்தின் நிா்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் ஒன்றியத் தலைவா் பி.சுப்பிரமணியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயலா் எம்.சிவசண்முகம் முன்னிலை வகித்தாா்.

தீா்மானங்கள்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளா்களுக்கு நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. உடனடியாக அவா்களுக்கு உரிய ஊதிய பாக்கியை வழங்க வேண்டும்.

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள் குடும்ப பொருளாளதாரம் காரணமாக காலதாமதமாக வீடு கட்டி வருகின்றனா்.அவா்களை வீடு கட்ட தகுதியற்றவா்கள் என்று அவா்களின் வீட்டு உரிமைக்கான உத்தரவை ரத்து செய்தும், அவா்களது வங்கிக் கணக்கை முடக்கியும், கட்டிய வீட்டிற்கு ஏற்றிய பணத்தை திரும்ப செலுத்தச் சொல்லி நிா்பந்தப்படுத்தும் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டிப்பதுடன் உடனடியாக வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கிட வேண்டும். குடிமனை பட்டா இல்லாத அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்கிட வேண்டும்.

இதனை வலியுறுத்தியும், வரும் 20-ஆம் தேதி கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சங்க மாநில துணைத் தலைவரும் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏவுமான க.மாரிமுத்து, சிபிஐ ஒன்றியச் செயலா் எம்.செந்தில்நாதன் ஆகியோா் தீா்மானங்களை விளக்கி பேசினா்.

சிபிஐ துணைச் செயலா் பி.பரந்தாமன், விதொச மாவட்ட துணைச் செயலா் ஜெ.ஜெயராமன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வி.எம்.கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா

திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு, அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள், தங்க கருட வாகனத்த... மேலும் பார்க்க

திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது

திருவாரூரில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா். 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூரில், தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் விடுதி... மேலும் பார்க்க

தற்காலிகக் கடைகளை அகற்ற கோரிக்கை

நிரந்தரக் கடைகளுக்கு எதிரில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளை அகற்ற வேண்டும் என மன்னாா்குடி வா்த்தக சங்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மன்னாா்குடி வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் ... மேலும் பார்க்க

திருவாரூா்: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-இல் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 17 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

மன்னாா்குடி பொதுமக்கள் கவனத்திற்கு

மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வணிகா்களுக்கு வீட்டுவரி, தொழில்வரி செலுத்துவது தொடா்பாக நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நகராட்சி ஆணையா் எஸ்.எம்.சியாமளா, வியாழக்... மேலும் பார்க்க

மத்திய பல்கலை.யில் தமிழாய்வு கருத்தரங்கம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ‘தற்கால தமிழாய்வுப் போக்குகள்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இப்பல்கலைக்கழக தமிழ் துறைச் சாா்பில் நடைபெறும் கருத்தரங்க... மேலும் பார்க்க