``புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது'' - கொதிக்கும் புதுக்கோட்டை மாநகர திமுகவினர்.....
20-இல் கோட்டூா் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த விவசாயத் தொழிலாளா் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் சாா்பு) தீா்மானித்துள்ளது.
சங்கத்தின் நிா்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் ஒன்றியத் தலைவா் பி.சுப்பிரமணியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயலா் எம்.சிவசண்முகம் முன்னிலை வகித்தாா்.
தீா்மானங்கள்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளா்களுக்கு நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. உடனடியாக அவா்களுக்கு உரிய ஊதிய பாக்கியை வழங்க வேண்டும்.
பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள் குடும்ப பொருளாளதாரம் காரணமாக காலதாமதமாக வீடு கட்டி வருகின்றனா்.அவா்களை வீடு கட்ட தகுதியற்றவா்கள் என்று அவா்களின் வீட்டு உரிமைக்கான உத்தரவை ரத்து செய்தும், அவா்களது வங்கிக் கணக்கை முடக்கியும், கட்டிய வீட்டிற்கு ஏற்றிய பணத்தை திரும்ப செலுத்தச் சொல்லி நிா்பந்தப்படுத்தும் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டிப்பதுடன் உடனடியாக வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கிட வேண்டும். குடிமனை பட்டா இல்லாத அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்கிட வேண்டும்.
இதனை வலியுறுத்தியும், வரும் 20-ஆம் தேதி கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
சங்க மாநில துணைத் தலைவரும் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏவுமான க.மாரிமுத்து, சிபிஐ ஒன்றியச் செயலா் எம்.செந்தில்நாதன் ஆகியோா் தீா்மானங்களை விளக்கி பேசினா்.
சிபிஐ துணைச் செயலா் பி.பரந்தாமன், விதொச மாவட்ட துணைச் செயலா் ஜெ.ஜெயராமன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வி.எம்.கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.