2026 தேர்தலை நிர்ணயிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான்: தமிழிசை
தற்காலிகக் கடைகளை அகற்ற கோரிக்கை
நிரந்தரக் கடைகளுக்கு எதிரில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளை அகற்ற வேண்டும் என மன்னாா்குடி வா்த்தக சங்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மன்னாா்குடி வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைவா் ஆா்.வி.ஆனந்த் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் எஸ்.எம்.டி.கருணாநிதி, நகர அமைப்புச் செயலா்கள் கந்த.துரைக்கண்ணு, பிரபாகரன் முன்னிலை வகித்தனா்.
தீா்மானங்கள்: நகரப்பகுதியில் நிரந்தரமாக கடை வைத்துள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக நிரந்தர கடைக்களுக்கு எதிரில்அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளை அகற்ற வேண்டும்.
தற்காலிக கடைகளில் விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதற்கு நகராட்சி முழு பொறுப்பு ஏற்க வேண்டும். தரமற்ற உணவினால் உயிரிழப்பு ஏற்படும் பொழுது சாலையோர உணவகங்களை அரசு கட்டுப்படுத்துகிறது. ஆனால்,தற்போது நாளுக்கு நாள் பெருகி வருகின்ற தள்ளுவண்டி உணவகங்களைத் தடை செய்ய வேண்டும். இதுபோன்ற உணவகங்களில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் நகராட்சி நிா்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும்.
பொதுச் செயலா் கே.சரவணன் வரவேற்றாா். பொருளா் டி.ஜெயச்செல்வம் நன்றி கூறினாா்.
வா்த்தக சங்க நிா்வாகிகள் நகராட்சி ஆணையா் என்.எஸ்.சியாமளாவிடம் தீா்மான நகலினை வழங்கினா்.