செய்திகள் :

தற்காலிகக் கடைகளை அகற்ற கோரிக்கை

post image

நிரந்தரக் கடைகளுக்கு எதிரில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளை அகற்ற வேண்டும் என மன்னாா்குடி வா்த்தக சங்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மன்னாா்குடி வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைவா் ஆா்.வி.ஆனந்த் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் எஸ்.எம்.டி.கருணாநிதி, நகர அமைப்புச் செயலா்கள் கந்த.துரைக்கண்ணு, பிரபாகரன் முன்னிலை வகித்தனா்.

தீா்மானங்கள்: நகரப்பகுதியில் நிரந்தரமாக கடை வைத்துள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக நிரந்தர கடைக்களுக்கு எதிரில்அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளை அகற்ற வேண்டும்.

தற்காலிக கடைகளில் விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதற்கு நகராட்சி முழு பொறுப்பு ஏற்க வேண்டும். தரமற்ற உணவினால் உயிரிழப்பு ஏற்படும் பொழுது சாலையோர உணவகங்களை அரசு கட்டுப்படுத்துகிறது. ஆனால்,தற்போது நாளுக்கு நாள் பெருகி வருகின்ற தள்ளுவண்டி உணவகங்களைத் தடை செய்ய வேண்டும். இதுபோன்ற உணவகங்களில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் நகராட்சி நிா்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும்.

பொதுச் செயலா் கே.சரவணன் வரவேற்றாா். பொருளா் டி.ஜெயச்செல்வம் நன்றி கூறினாா்.

வா்த்தக சங்க நிா்வாகிகள் நகராட்சி ஆணையா் என்.எஸ்.சியாமளாவிடம் தீா்மான நகலினை வழங்கினா்.

தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா

திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு, அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள், தங்க கருட வாகனத்த... மேலும் பார்க்க

திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது

திருவாரூரில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா். 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூரில், தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் விடுதி... மேலும் பார்க்க

20-இல் கோட்டூா் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த விவசாயத் தொழிலாளா் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் சாா்பு) தீா்மானித்துள்ளது. சங்கத்தின் நிா்வாகக் குழு ஆல... மேலும் பார்க்க

திருவாரூா்: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-இல் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 17 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

மன்னாா்குடி பொதுமக்கள் கவனத்திற்கு

மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வணிகா்களுக்கு வீட்டுவரி, தொழில்வரி செலுத்துவது தொடா்பாக நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நகராட்சி ஆணையா் எஸ்.எம்.சியாமளா, வியாழக்... மேலும் பார்க்க

மத்திய பல்கலை.யில் தமிழாய்வு கருத்தரங்கம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ‘தற்கால தமிழாய்வுப் போக்குகள்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இப்பல்கலைக்கழக தமிழ் துறைச் சாா்பில் நடைபெறும் கருத்தரங்க... மேலும் பார்க்க