செய்திகள் :

2026 தேர்தலை நிர்ணயிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான்: தமிழிசை

post image

2026 தேர்தலை நிர்ணயிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான் என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தனை பார்ப்பதற்காக வந்திருந்த தமிழிசை சௌந்தரராஜன் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீளமான பட்ஜெட் வெற்று பட்ஜெட் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாத பட்ஜெட். முன்னேற்றத்திற்கான எந்த கவனமும் செலுத்தாமல் சண்டை போடும் நோக்கத்திலேயே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிப்பாதாக குறை சொல்கிறார்கள். பட்ஜெட்டில் டெல்டா மாவட்ட மக்களின் பயனுக்காக எந்த திட்டமும் இல்லை. இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார். பெண் பாதுகாப்பிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா அமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிலிண்ட்ருக்கு நூறு ரூபாய் மானியம் கொடுக்கப்படும் என்றார்கள். அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கு எந்த நிதியும் இதுவரை ஒதுக்கவில்லை. மகளிர் உதவி தொகை விண்ணப்பித்தவர்களுக்கு கொடுக்கப்படும் என தமிழக அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே 2500 வழங்கியது. பெண்களின் பயணத்திற்கு இலவச என்பது மட்டும் முன்னேற்றத்திற்கு வழிவகையாக இருக்காது. ஏதோ பெண்களுக்கு கொஞ்சம் இலவசம் கொடுத்தால் வாழ்வாதாரம் மேம்படும் என நினைக்கிறார்கள்.

கல்வித் துறைக்கு தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?

ஆனால் பெண்கள் மேம்படுவதற்கான திட்டம் எதுவும் இல்லை. பென்ஷன் திட்டம் குறித்து எந்த திட்டமும் இல்லை, மின் கட்டண உயர்வு குறித்து எந்த திட்டமும் இல்லை. எதுவுமே இல்லாத ஒரு பட்ஜெட் இது. 2026 தேர்தலை நிர்ணயிக்கப் போவது மது ஊழலும், மணல் கொள்ளையும் தான். விளம்பர நோக்கில், வெற்று அரசு நடந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த வெற்று நிதி நிலை அறிக்கை உணர்த்தியுள்ளது. இது ஒரு வெற்று பட்ஜெட். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாா்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: திருவான்மியூா் ராமச்சந்திரா கலையரங்கத்தில் மா... மேலும் பார்க்க

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேட்டுக்கு முகாந்திரம் இல்லை: அமைச்சா் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை து... மேலும் பார்க்க

எண்ம வா்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு

எண்ம வா்த்தகம் மூலம் அரசுக்கான வருவாய் உரிய முறையில் கிடைக்கிா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: கேரள முதல்வா் பினராயி விஜயன் ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்து தமிழக முதல்வா் சாா்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டத்துக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தாா்... மேலும் பார்க்க

சா்வதேச தரவரிசையில் அண்ணா பல்கலை. இடம்பெற செயல் திட்டம்

உலக அளவிலான க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்யும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டம்: காவல் ஆணையா் தொடங்கி வைத்தாா்

கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கோடைக்காலத்தில் போக்குவரத்து போலீஸாரின் தாகத்த... மேலும் பார்க்க