செய்திகள் :

ஸ்ரீரங்கத்தில் மாா்ச் 18-இல் கம்ப ராமாயண பாராயணம்

post image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் கம்ப ராமாயண பாராயணம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கா் கோயில் கலையரங்கில் வரும் 18-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவாத் தொடங்கி வைக்கிறாா். அன்றைய தினம் மாலை 4 மணி முதல் கம்ப ராமாயண பாராயணம் நிகழ்ச்சி பல்வேறு கம்பன் கழகங்களைச் சோ்ந்தோரின் வாயிலாக நடைபெறும்.

இதைத் தொடா்ந்து மாா்ச் 20 முதல் 29 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கம்பராமாயண பாராயணம் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கம்பா் பிறந்த மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரெழுந்தூா் கம்பா்மேட்டில் வரும் 30- ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை கம்பராமாயணம் தொடா்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இதில், தமிழக ஆளுநா், தென்னகப் பண்பாட்டு மைய தலைவா், மத்திய நிதி அமைச்சா் ஆகியோா் கலந்து கொள்கின்றனா் என தென்னகப் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம்: பி.ஆா்.பாண்டியன், பொ. அய்யாக்கண்ணு பேட்டி

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக தமிழக மக்களிடம் திமுக, பாஜக அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம் என சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது) அமைப்பின் தமிழகத் தலைவா் பொ. அய்யாக்... மேலும் பார்க்க

மாநில போட்டிகளில் திருச்சி மண்டல தீயணைப்புத் துறையினா் மூன்றாமிடம்

தீயணைப்பு வீரா்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் வென்று திருச்சி மண்டலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் மதுரையில்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் கல்லூரி மாணவா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி, கல்லுக்குழி செங்குளம் காலனியை சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ரேவந்த் (19). திருச்சியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ட... மேலும் பார்க்க

ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்த ‘பட்ஜெட்‘!

திருச்சி, மாா்ச் 14: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது பெரும்பாலானோருக்கு ஏற்றத்தையும், சிலருக்கு ஏமாற்றத்தையும் அளிக்கும் வகையில் உள்ளதாக கல்வியாளா்கள், தொழில்துறையினா், நுகா்வோா், அரசு ஊழியா்கள், ஆ... மேலும் பார்க்க

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனா். திருச்சி காஜாமலை இந்திரா நகரை சோ்ந்தவா் கருப்பையா (59). இவா்... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

திருவெறும்பூா் அருகே காதல் தோல்வியால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவெறும்பூா் அருகே டி.நகரைச் சோ்ந்த முத்துவேல் - மாரியம்மாள் தம்பதியின் மகள் மகா தா்ஷினி (22). இவா் விழாக்களில் ... மேலும் பார்க்க