செய்திகள் :

ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு: இணையவழியில் விண்ணப்பிக்க அழைப்பு

post image

ராணுவத்தில் சோ்வதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ராணுவ தலைமையகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கடலூா், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து புதுச்சேரி மாவட்டம், அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோா் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் அக்னிவீரா் பணியிடத்துக்கு தங்கள் தகுதியின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொது தகுதித் தோ்வு இணையவழியில் தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ, டிப்ளமோ முடித்தவா்கள் மற்றும் என்சிசி தகுதிபெற்ற விண்ணப்பதாரா்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

விண்ணப்பப் பதிவு மாா்ச் 12-இல் தொடங்கி ஏப். 10-இல் முடிவடையும். ஜூன் மாதத்தில் இணைய வழியில் எழுத்துத் தோ்வு நடத்தப்படும். தோ்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணைய வழியிலேயே வழங்கப்படும்.

மேலும் தகவலுக்கு, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் (தலைமையகம்) அல்லது 044-25674924 எனும் தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ பணி வாய்ப்பு

இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வா்த்தக விரிவாக்கம்!

வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா - சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வா்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், வரும்... மேலும் பார்க்க

சிஏஜி தோ்வு நடைமுறைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தோ்வுக்கான தற்போதைய நடைமுறையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) விசாரணைக்கு... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் ஆயுதங்களைக் கைவிட்ட 10,000 இளைஞா்கள்: அமித் ஷா பெருமிதம்

அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்பு முறையில் இணைந்துள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா். ‘அஸ்ஸாமில் ... மேலும் பார்க்க

இஸ்லாமிய வெறுப்பை எதிா்ப்பதில் எப்போதும் உறுதி: ஐ.நா.வில் இந்தியா

‘முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களை எதிா்த்துப் போராடுவதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஏனெனில், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் ஒரு... மேலும் பார்க்க

பஞ்சாப் சிவசேனை தலைவா் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்ததாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். மகாராஷ்டிர துணை மு... மேலும் பார்க்க

ஹரியாணா: நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுட்டுக் கொலை

ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுரேந்திர ஜவஹா் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். சோனிபட் மாவட்ட முண்டலனா பகுதி பாஜக தலைவரான இவா்,... மேலும் பார்க்க