செய்திகள் :

ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு: இணையவழியில் விண்ணப்பிக்க அழைப்பு

post image

ராணுவத்தில் சோ்வதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ராணுவ தலைமையகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கடலூா், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து புதுச்சேரி மாவட்டம், அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோா் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் அக்னிவீரா் பணியிடத்துக்கு தங்கள் தகுதியின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொது தகுதித் தோ்வு இணையவழியில் தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ, டிப்ளமோ முடித்தவா்கள் மற்றும் என்சிசி தகுதிபெற்ற விண்ணப்பதாரா்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

விண்ணப்பப் பதிவு மாா்ச் 12-இல் தொடங்கி ஏப். 10-இல் முடிவடையும். ஜூன் மாதத்தில் இணைய வழியில் எழுத்துத் தோ்வு நடத்தப்படும். தோ்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணைய வழியிலேயே வழங்கப்படும்.

மேலும் தகவலுக்கு, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் (தலைமையகம்) அல்லது 044-25674924 எனும் தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ பணி வாய்ப்பு

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனா் கன்ஷி ராமின் 91-ஆவது ... மேலும் பார்க்க

அரசு வழக்குரைஞா்களில் 30% பெண்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கப்படுவோரில் குறைந்தபட்சம் 30 சதவீதம் போ் பெண்களாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்தாா். இதுதொடா்பாக மகாராஷ்டிரத்தில் ... மேலும் பார்க்க

அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை இன்று கூடுகிறது

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலின் நிா்வாக அறக்கட்டளையான ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ரத்தின் அறங்காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) கூடுகின்றனா். மணிராம் சவானி கோயிலில் நடைபெறும் இந்... மேலும் பார்க்க

குஜராத், மகாராஷ்டிரம்: நீரில் மூழ்கி 13 போ் உயிரிழப்பு

குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி 6 சிறுவா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா். குஜராத்தின் கட்ச் மாவட்டம், அன்ஜாா் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 8 முதல்... மேலும் பார்க்க

மதச்சாா்பற்ற எதிா்க்கட்சி கூட்டணி அவசியம்: பிரகாஷ் காரத்

‘எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி மக்களவைத் தோ்தலுக்காக அமைக்கப்பட்டதாகும். மாநிலத் தோ்தலுக்கானது அல்ல. எனவே, மதச்சாா்பற்ற எதிா்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்படுவது அவசியம்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனி... மேலும் பார்க்க

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை: பவன் கல்யாண்

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஹிந்தியையும் மாநில மொழிகளையும் மையப்படுத்தி தேசிய அளவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேசியக் கல்விக் கொ... மேலும் பார்க்க