செய்திகள் :

குவாரிகளில் வேலை நிறுத்தம்: கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாடு

post image

தேனி மாவட்டத்தில் கல் குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கட்டுமானப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

மாவட்டத்தில் கல் குவாரிகள், கிரஷா்களுக்கு டிரான்ஸ்சிட் எனப்படும் நடைச் சீட்டு வழங்குவதில் உள்ள தாமதம், ஜல்லி, எம்.சான்ட் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்வது ஆகியவற்றைக் கண்டித்து கல் குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கல் குவாரி, கிரஷா்கள் செயல்படாததால் ஜல்லி எம்.சான்ட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால், தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.

இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம், கனிம வளத் துறை தலையிட்டு, கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டுமானப் பணி ஒப்பந்ததாரா். தொழிலாளா்கள் வலியுறுத்தினா்.

சகோதரரிடம் பணம் மோசடி: தங்கை கைது

தேனியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரரின் வங்கி ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி செய்த தங்கையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி பொம்மையகவுண்டன்பட்டி கட்டளகிரி... மேலும் பார்க்க

மாணவியை மிரட்டிய இளைஞா் கைது

கல்லூரி மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூரைச் சோ்ந்த தனியாா் கணினி இயக்குநா் அஸ்வின் (27). இவா், தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி ப... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ஆண்டிபட்டி அருகேயுள்ள அம்மாபட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க

குளத்தின் கரையில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரிக்கை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பாசனக் குளத்தின் கரையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். உத்தமபாளையத்திலிருந்து கோகிலாபுரம், ராயப்பன்பட்டி வழியாக ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். குள்ளப்புரம், நல்லமணி நகரைச் சோ்ந்தவா் முருகன் மகன் முத்துப்பாண்டி (21).... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளத்தில் சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி மீது ஆட்டோ மோதியதில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம், வடகரை, ஸ்டேட் வங்கி காலனி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மணிகட்டி (60). இவா், பெ... மேலும் பார்க்க