சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
ஆண்டிபட்டி அருகேயுள்ள அம்மாபட்டியைச் சோ்ந்தவா் பரமசிவம் (54). கூலித் தொழிலாளியான இவரை, 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கடந்த 2023 ஆண்டு, பிப்.2-ஆம் தேதி ராஜதானி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் பரமசிவத்துக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ப.கணேசன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி, மருத்துவச் செலவுக்காக இவரது தாயிடம் ரூ.ஒரு லட்சமும், சிறுமியின் பெயரில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் ரூ.5 லட்சம் வைப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.