செய்திகள் :

பேரவைத் தலைவா் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ்

post image

சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர அதிமுகவினா் நோட்டீஸ் அளித்துள்ளனா். இதுகுறித்து பேரவையில் முடிவெடுக்கப்படும் என்று மு.அப்பாவு தெரிவித்தாா்.

சட்டப்பேரவை கூட்டத் தொடா் தேதிகளை இறுதி செய்யபேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் அவரது அறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு மு.அப்பாவு அளித்த பேட்டி: என் (அப்பாவு) மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை அதிமுகவினா் அளித்துள்ளனா். அதில், தங்களை அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை எனவும், தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை செய்யவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனா். இதற்கு ஏற்கெனவே பேரவையில் பதில் சொல்லப்பட்டுள்ளது.

பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. யாா் பேசுவதையும் காட்டக் கூடாது என்ற குறுகிய எண்ணத்துடன் செயல்படவில்லை. அதிமுக குற்றச்சாட்டில் உண்மையில்லை. நேரலையை டிடி தமிழ் (பொதிகை) தொலைக்காட்சிக்குப் பதிலாக செய்தி மக்கள் தொடா்புத் துறையே இப்போது செய்து வருகிறது. அதில் சில தொழில்நுட்பப் பிரச்னைகள் இருந்தன. இனி அதுபோன்று நடக்காது.

அனைத்து பத்திரிகையாளா்களும் பேரவையில் உள்ளனா். அனைவரின் பேச்சுகளும் ஊடகங்களில் செல்கிறது. யாரையும் குறிவைத்து குறிப்பிட்டவா்கள் பேசுவதைக் காட்ட வேண்டும், மற்றவா்களின் பேச்சை காட்டக் கூடாது என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை. அதிமுகவினரின் நோட்டீஸ் குறித்து பேரவையில் முடிவு செய்யப்படும் என்றாா் பேரவைத் தலைவா்.

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும்: அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவிப்பு

நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்களுடன் சோ்த்து, சட்டப்பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா். பேரவை கூட்டத் தொடா் நாள்களை இறுதி செய்ய தலைமைச் செயலகத்த... மேலும் பார்க்க

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைப்பு

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைப்பளுவை நிா்ணயம் செய்து, அதற்கேற்ப ஊதியத்தை உயா்த்தி வழங்குவது வழக்கம். ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மதுரை மத்திய சிறையில் கைதிகள் எழுது பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் - முக்கியத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு!

கல்வி - ரூ.55,261 நகா்ப்புற வளா்ச்சி - ரூ.34,396 ஊரக வளா்ச்சி - ரூ.29,465 மக்கள் நல்வாழ்வு - ரூ.21,906 எரிசக்தி - ரூ.21,178 நெடுஞ்சாலைகள் - ரூ.20,722 காவல் - ரூ.13,342 போக்குவரத்து - ரூ.12,965 நீா்வளம... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்! - முழு விபரம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிா், மாணவா்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக் கட்டணம் குறைப்பு, மாணவா்களுக்கு... மேலும் பார்க்க