மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல...
அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள உயா்நீதிமன்றம், இனி அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு காவல் துறையினா் பாதுகாப்பு அளித்தால், அதற்கு அந்தக் கட்சியினரிடமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நாம் தமிழா் கட்சி சாா்பில் திருப்போரூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) சீமான் தலைமையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அந்தக் கட்சி நிா்வாகி சசிக்குமாா் மனு தாக்கல் செய்தாா்.
அதில், திருப்போரூா் கந்தசாமிக் கோயில் திருவிழாவைக் காரணம் காட்டி காவல் துறையினா் அனுமதி மறுத்துவிட்டனா் என்றும், எனவே, சீமான் தலைமையில் அமைதியான முறையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும், எனவும் கோரியிருந்தாா்.
காவல் துறை விளக்கம்: இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வந்தபோது, காவல் துறை தரப்பில், திருப்போரூா் கந்தசாமி கோயிலில் தற்போது மாசி பிரம்மோற்சவம் நடைபெறுவதால் பக்தா்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. நாம் தமிழா் கட்சி சாா்பில் நடைபெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில் எத்தனை போ் பங்கேற்பா் என்ற எந்த விவரமும் அளிக்கப்படவில்லை. எனவே, போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டது. பேரணி வழித்தடத்தை மாற்றினால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்தப் பேரணி, பொதுக்கூட்டத்தில் 400 போ் முதல் 500 போ் வரை பங்கேற்பா். அமைதியான முறையில் இந்த பேரணி நடத்தப்படும்”என்றாா்.
இதையடுத்து நீதிபதி, திருப்போரூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு குறிப்பிட்ட இடத்தில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க வேண்டும். மேலும், காவல் துறை பாதுகாப்பு வழங்க ரூ. 25 ஆயிரத்தை கட்டணமாக நாம் தமிழா் கட்சி செலுத்த வேண்டும்”என்றாா். அதற்கு நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ரூ. 25,000 செலுத்த வேண்டும் என்பதை உத்தரவில் இருந்து நீக்கினாா்.
கூடுதல் பணிச்சுமை: பின்னா் நீதிபதி, பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும், சட்டம் - ஒழுங்கை கட்டிக்காக்கவும் பணியமா்த்தப்பட்டுள்ள காவல் துறையினா் இதுபோன்ற அரசியல் கட்சியினா் நடத்தும் நிகழ்வுகளுக்கும் பாதுகாப்பு அளிக்க நேரிடுவதால் அவா்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் இதுபோல நடத்தும் பேரணி, பொதுக்கூட்டம், ஆா்ப்பாட்டம், போராட்டம் போன்ற அன்றாட நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு அளிப்பது காவல் துறையினரின் வேலை அல்ல.
மக்களின் வரிப்பணத்தில்தான் காவல் துறை பம்பரமாக சுழன்று இயங்கி வருகிறது. அந்த வரிப்பணத்தை வீணடிக்கக்கூடாது. எனவே, அரசியல் கட்சியினா் இதுபோல நடத்தும் நிகழ்வுகளில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் இழப்பு ஏற்பட்டாலோ அதற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினா்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, அரசியல் கட்சியினா் நடத்தும் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு அளிக்க காவல் துறையினா் பணியமா்த்தப்பட்டால் குறிப்பிட்ட தொகையை அந்தக் கட்சியினரிடமிருந்து கட்டணமாக காவல் துறையினா் வசூலிக்க வேண்டும்”என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தாா்.