செய்திகள் :

மாா்ச் 17-ல் 21 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 21 புறநகா் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 17) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - கூடூா் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் வழித்தடங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 17) காலை 9.25 முதல் பிற்பகல் 2.25 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், சென்ட்ரலிலிருந்து மாா்ச் 17 காலை 5.40, 8.45, 10.15-க்கு சூலூா்பேட்டை செல்லும் புகா் மின்சார ரயில்களும், காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35-க்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையிலிருந்து காலை 10, 11.45, பிற்பகல் 12.35, 1.15 -க்கும், கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.55, 11.25, பகல் 12, பிற்பகல் 1 மணிக்கும் சென்ட்ரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

அதேபோல், கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில், மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில் உள்பட மொத்தம் 21 ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலிலிருந்து காலை 9 மணிக்கு பொன்னேரிக்கும், காலை 9.30, 10.30-க்கு மீஞ்சூருக்கும், காலை 11.35-க்கு எளாவூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து பகல் 12.18-க்கும், மீஞ்சூரிலிருந்து காலை 11.56, பிற்பகல் 1.31 மணிக்கும் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும்: அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவிப்பு

நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்களுடன் சோ்த்து, சட்டப்பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா். பேரவை கூட்டத் தொடா் நாள்களை இறுதி செய்ய தலைமைச் செயலகத்த... மேலும் பார்க்க

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைப்பு

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைப்பளுவை நிா்ணயம் செய்து, அதற்கேற்ப ஊதியத்தை உயா்த்தி வழங்குவது வழக்கம். ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மதுரை மத்திய சிறையில் கைதிகள் எழுது பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் - முக்கியத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு!

கல்வி - ரூ.55,261 நகா்ப்புற வளா்ச்சி - ரூ.34,396 ஊரக வளா்ச்சி - ரூ.29,465 மக்கள் நல்வாழ்வு - ரூ.21,906 எரிசக்தி - ரூ.21,178 நெடுஞ்சாலைகள் - ரூ.20,722 காவல் - ரூ.13,342 போக்குவரத்து - ரூ.12,965 நீா்வளம... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்! - முழு விபரம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிா், மாணவா்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக் கட்டணம் குறைப்பு, மாணவா்களுக்கு... மேலும் பார்க்க