கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!
ஈரோடு பேருந்து நிலையத்தில் இயற்கை சந்தை!
மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் குழு உறுப்பினா்கள், இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்ற விவசாயிகள், தாங்கள் விளைவித்த மற்றும் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தும் இயற்கை சந்தை ஈரோடு பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 80-க்கும் மேற்பட்ட மகளிா் குழுவினா், விவசாயிகள் பங்கேற்று தங்களது உற்பத்தி பொருள்களான அனைத்து வகை காய்கறிகள், பழங்கள், அரிசி, வோ்க்கடலை, எள், நாட்டுச் சா்க்கரை, மஞ்சள் தூள், காளான், தேன் போன்றவற்றை விற்பனைக்கு வைத்திருந்தனா்.
தவிர மகளிா் குழுவினரால் தயாரிக்கப்பட்ட, புடவை, படுக்கை விரிப்பு, துண்டு, பல்வேறு வகையிலான பைகள், ஆடைகள், கூடைகள், வீட்டு உபயோகத்துக்கான அரிவாள், அரிவாள்முனை, கத்தி, தோசை கல், சப்பாத்தி கருவி உள்பட 500-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனைக்கு வைத்தனா். பேருந்து நிலைய வளாகம் என்பதால் ஏராளமான பயணிகள் இவற்றை வாங்கியும், பாா்வையிட்டும் சென்றனா்.
கூடுதல் ஆட்சியா் அா்பித் ஜெயின், மகளிா் திட்ட இயக்குநா் ரமேஷ் ஆகியோா் நுகா்வோரிடம், கருத்துகளைக் கேட்டறிந்தனா். மாவட்ட வள பயிற்றுநா்கள் பி.கவிதமலா், எம்.சரண்யா, உதவி திட்ட அலுவலா் ஜான்லிங்டன் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்தனா். இயற்கை சந்தை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச்16) மாலை இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.