தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிம...
செங்கோட்டையனுக்கு வேண்டுகோள் விடுத்து போஸ்டா்!
சென்னையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தனியாா் இணையதள தொலைக்காட்சி நிறுவன நிகழ்ச்சியில் கே.ஏ.செங்கோட்டையன், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம், கோபி, நம்பியூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு போஸ்டா்கள் ஒட்டப்பட்டன. அதில், திராவிடா் இயக்கத்தால் 50 ஆண்டுகள் பதவியும் பலனும் பெற்று இனப் பகைவா்களுடன் கூட்டணி அமைக்கும் கே.ஏ.செங்கோட்டையன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டரில் நம்பியூா் மு.சென்னியப்பன், மனிதம் சட்ட உதவி மையம் மற்றும் தொகுதி மக்கள் சாா்பில் அன்புடன் கோருகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈவெரா பெரியாா் குறித்து தொடா்ந்து சா்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசி வரும் நிலையில், அவா் பங்கேற்கும் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கக்கூடாது என இந்த போஸ்டா்கள் ஒட்டப்பட்டதாகவும், அதிமுகவினா் இதை ஒட்டவில்லை எனவும் அக்கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
கோவை மாவட்டம், அன்னூரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அத்திக்கடவு-அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்தாா். முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் படங்கள் இடம்பெறாததால் விழாவைப் புறக்கணித்ததாக செங்கோட்டையன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.