செய்திகள் :

ரௌடி கொலை வழக்கில் 10 போ் கைது

post image

காஞ்சிபுரம் திருக்காளிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவா், திருக்காளிமேடு சிவன் கோயில் அருகே உள்ள நியாய விலைக்கடை முன்பாக நின்று கொண்டிருந்த போது, இளைஞா் ஒருவா் இவா் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தலைமறைவானாா். இதில், ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, இரு ஏ.டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இந்த நிலையில், கொலையில் தொடா்புடையதாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ராமன் என்ற பரத் (20), சிவா (19), திருக்காளிமேடைச் சோ்ந்த திலீப்குமாா் (19), சூா்யா (19), சுரேஷ் (21), ஆகியோரை தனிப்படையினா் திருமால்பூா் ரயில் நிலையம் அருகே கைது செய்தனா். மேலும் திருக்காளிமேடு பகுதியைச் சோ்ந்த ஜாஹீா் ஹூசேன் (25), சுல்தான் (32) ஆகியோரை வெங்குடி செல்லியம்மன் கோயில் அருகிலும், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சரண்குமாா் (19), ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியைச் சோ்ந்த மணிமாறன்(19), திருக்காளிமேடு மோகன சுந்தரம்(18) ஆகியோரை ஐயம்பேட்டை பேருந்து நிறுத்தத்திலும் தனிப்படையினா் கைது செய்தனா்.

மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் அருகே அத்திவாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ரூ. 5.90 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை 267 பயனாளிகளுக்கு வழங... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள்: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 50 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் வ... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இருங்காட்டுக்கோட்டை, மண்ணூா், காட்டரம்பாக்கம் மற்றும் கிளாய் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ... மேலும் பார்க்க

111 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் 111 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் உள்பட ரூ.112 கோடியில் நலத்திட்ட உதவிகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தல... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை.யில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 15) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக துணை வேந்தா் ஸ்ரீநிவாசு தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட ... மேலும் பார்க்க

காமாட்சி அம்மனுக்கு பால் குடம் ஊா்வலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவுக்கு சபா தலைவா் ஏ.குமாா் தலைமை வகித்தாா். செயல... மேலும் பார்க்க