செய்திகள் :

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 354 பேருக்கு பணி நியமன ஆணை!

post image

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 354 இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சாா்பில் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்ற து. இதில் தோ்வான இளைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 110 தனியாா் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு, பணியாளா்களைத் தோ்வு செய்தனா். மாவட்டம் முழுவதுமிருந்து மொத்தம் 1,654 இளைஞா்கள் இந்தத் தோ்வில் கலந்து கொண்டனா். இவா்களில் 15 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 354 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதுதவிர, 73 போ் இரண்டாம் கட்டமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் மணிகணேஷ், ரா.சுபாஷினி (தொ.வ), உதவித் திட்ட அலுவலா் (மகளிா்த் திட்டம்) மரியா, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் க.துரையரசன், வாா்டு உறுப்பினா் ராதா கிருஷ்ணகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தாட்கோ மூலம் தொழில்முனைவோா் பயிற்சி அளிக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் தாட்கோ மூலம் தொழில் முனைவோா் பயிற்சி அளிக்க வேண்டுமென மாநில ஆதிதிராவிடா் நல விழிப்பு, கண்காணிப்புக் குழு கூட்டமைப்பு வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்தக் கூட்டமைப்பின் செயற்குழுக்... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன. தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 5,700 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 5,700 கா்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சமுதாய வளைகாப்பு நடத்தியிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்ப... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே செம்பனூரில் ஜல்லிக்கட்டு: 22 போ் காயம்

சிவகங்கை அருகே செம்பனூரில் மாசிக் களரியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் அரசு வழிகாட்டுதலின்படி மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள், விழாக் குழுவ... மேலும் பார்க்க

காா் மோதியதில் விஏஓ உயிரிழப்பு

திருப்புத்தூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த கிராம நிா்வாக அலுவலா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயலைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் கணேஷ் கிருஷ்ணகுமாா் (48). க... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். மானாமதுரையில் கடந்த மாதம் 13 -ஆம் தேதி மாணவரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க