செய்திகள் :

Pushpa 3: ``அல்லு அர்ஜூன் அட்லி படம்; 'புஷ்பா-3' அப்டேட்; " - தயாரிப்பாளர் சொல்வதென்ன?

post image
புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வசூல் வெற்றியை அடுத்து வெளியான இரண்டாம் பாகமும் வசூலைக் குவித்து கவனம் ஈர்த்திருந்தது.

முதல் பாகம் நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்று அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், தேவி ஶ்ரீ பிரசாத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் கிடைத்தது. இந்த மிகப்பெரிய வெற்றியை அடுத்து இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ரூ. 1500 கோடியைத் தாண்டியுள்ளது.

புஷ்பா 2

முதல் பாகம் அல்லு அர்ஜூன் செஞ்சந்தனக் கட்டை கடத்தலின் ராஜாவாக மாறி, ராஷ்மிகாவைத் திருமணம் செய்து பகத் பாசிலை எதிர்கொள்ளத் தயாராவதில் முடிந்தது.

இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜூன், மாநிலத்தின் முதலமைச்சரையே உருவாக்கும் கிங் மேக்கராக மாறி, பின் பெரும் அரசியல் புள்ளியின் மகன் மீது கை வைத்து பெரும் அதிகார வர்க்கத்தை பகைத்துக் கொண்டு அடுத்த ஆக்‌ஷனுக்குத் தயராவதாக மூன்றாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு விதைகளைத் தூவிவிட்டபடி முடிந்திருக்கிறது.

இந்நிலையில் 'புஷ்பா' படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பதற்கான பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அதன் தயாரிப்பாளர் ரவி ஷங்கர் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அவர், "புஷ்பா மூன்றாம் பகம் கண்டிப்பாக எடுப்போம். அல்லு அர்ஜூன் அட்லி, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரின் இயக்கத்தில் அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறார். அதை முடித்துவிட்டு புஷ்பா மூன்றாம் பாகத்தில் நடிப்பார். இயக்குநர் சுகுமாரும் ராம் சரணுடனான படத்தை முடித்துவிட்டு புஷ்பா -3 படத்திற்காக வேலைகளை ஆரம்பிப்பார். 2028ம் ஆண்டு புஷ்பா -3 திரையரங்கிற்கு வரும்" என்று பேசியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Soundarya : `என் மனைவியின் மரணத்துக்கு மோகன் பாபு காரணமா?' - சௌந்தர்யாவின் கணவர் சொல்வதென்ன?

1990களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் குறுகிய காலத்தில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் செளந்தர்யா. ரஜினியுடன் 'அருணாச்சலம்', 'படையப்பா', கமலுடன் 'காதலா காதலா', விஜயகாந்த்துடன் 'தவசி', 'ச... மேலும் பார்க்க

SSMB29 : மகேஷ் பாபுவுடன் இணையும் பிரியங்கா சோப்ரா; ஒடிஸாவில் படப்பிடிப்பைத் தொடங்கிய ராஜமௌலி!

பாகுபலி, ‘RRR’ போன்ற பிரமாண்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் அடுத்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் மகேஷ் பாபுவும், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிக்... மேலும் பார்க்க

Kalpana: ``நான் உயிரோட இருக்கக் காரணம் என் கணவர்தான்.... வதந்திகளைப் பரப்பாதீர்கள்'' - பாடகி கல்பனா

பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர், ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகின. வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை, அருகில் வீட்டில் குடியிருந்தவர்கள் மீட்டு தனியார் மர... மேலும் பார்க்க

Game Changer: `எங்களுடைய உழைப்புக்கு சம்பளம் கொடுக்கல' - காவல் நிலையத்தில் புகாரளித்த நடிகர்கள்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கடந்த மாதம் `கேம் சேஞ்சர்' திரைப்படம் வெளியாகியிருந்தது.தில் ராஜு தயாரித்திருந்த இத்திரைப்படத்திற்கு தற்போது ஒரு சிக்கல் வந்திருக்கிறது. இப்படத்தின் கா... மேலும் பார்க்க

Pushpa 2: "புஷ்பா படத்தைப் பார்த்து மாணவர்கள் கெட்டுப்போறாங்க" - தெலுங்கானா ஆசிரியர் சொல்வது என்ன?

'புஷ்பா-2' படத்தைப் பார்த்து மாணவர்கள் கெட்டுப் போய்விட்டதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த 2021 ஆம் ஆண்டு, சுகுமார் இயக்கத்... மேலும் பார்க்க

புஷ்பா திரைப்பட நடிகருக்கு திருமணம்: நீண்ட காலக் காதல் கைக் கூடியது; காதலியை சந்தித்தது எப்படி?

சமீபத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த புஷ்பா 2: தி ரூல் படத்தில் ஜாலி ரெட்டியாக நடித்தவர் டாலி தனஞ்சயா. சமீபத்தில் வெளியான ஜிப்ரா திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெ... மேலும் பார்க்க