செய்திகள் :

உத்தரகண்ட் நிதி அமைச்சர் ராஜிநாமா

post image

உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார்.

உத்தரகண்டில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மலைவாழ் மக்கள் குறித்து நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் போராட்டங்களும் அரங்கேறின.

பின்னர் அமைச்சர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். முதல்வர் புஷ்கர் சிங் தாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை பிரேம்சந்த் வழங்கினார்.

அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை

எனது வார்த்தைகளுக்கும் அவற்றின் தாக்கத்திற்கும் நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று பிரேம்சந்த் பதவி விலகும்போது கூறினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நமது மாநிலம் முன்னேற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

மாநில முன்னேற்றத்திற்காக உதவுவதற்கு நான் எந்த வகையிலும் பங்களிக்கத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

விண்வெளி விஞ்ஞானியாவது எப்படி? யாரெல்லாம் ஆக முடியும்?

விண்வெளி விஞ்ஞானி என்ற பணி பெயரையும் புகழையும் நல்ல சம்பளத்தையும் கொடுத்தாலும் எல்லோராலும் விண்வெளி விஞ்ஞானி ஆகிவிட முடியாது. அந்தப் பணியில் ஏகப்பட்ட ஆபத்துகள் இருந்தாலும், அதி தீவிர உடல் பாதிப்புகள்,... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பிரதான் திங்கள்கிழமை காலமானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடல் பிகாரி வாஜ்பாய் அரசில் ... மேலும் பார்க்க

பாபர் மசூதியின் நிலைமை ஔரங்கசீப் கல்லறைக்கும் ஏற்படும்: ஹிந்து அமைப்புகள் மிரட்டல்!

முகாலயப் பேரரசர் ஔரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால் மாநிலம் முழுவது போராட்டம் நடத்தவிருப்பதாக ஹிந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. முகாலயப் பேரரசர் ஔரங்கசீப் மராத்திய அரசரான சம்பாஜி மகாராஜாவை கொடும... மேலும் பார்க்க

அமிர்தசரஸ் கோயிலில் கையெறி குண்டு வீச்சு: சந்தேக நபர் சுட்டுக்கொலை

போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அமிர்தசரஸ் கோயில் குண்டுவெடிப்பு சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள கோயில் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு இ... மேலும் பார்க்க

கொல்கத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மல்யா பாக்சி பதவியேற்பு!

கொல்கத்தாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மல்யா பாக்சி இன்று பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில், மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நீதிபதி ஜாய்மல்யாவுக்கு இந்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி பலி

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவின் எல்லை மாவட்டமான ஹண்ட்வாராவில் உள்ள ஜசல்தாரா பகுதியில் பயங்கரவாதிகள் ... மேலும் பார்க்க