செய்திகள் :

Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்பவம்!

post image

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. 3 ஐசிசி கோப்பைகள், 5 ஐபிஎல் கோப்பைகளை அணிக்காக வென்று கொடுதித்திருக்கிறார். தோனியின் அடையாளமே அவர் களத்தில் எப்போதும் அமைதியாக இருந்து தனது திட்டத்தை நகர்த்துவார் என்பது தான். இதனால் ரசிகர்கள் தோனியை கேப்டன் கூல் என்று அழைப்பார்கள். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நீங்கள் எப்போதாவது களத்தில் உங்களுடைய நிதானத்தை இழந்து இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

Dhoni

வெற்றி முக்கியம்

அதற்கு பதில் அளித்த தோனி, " நிறைய முறை இழந்து இருக்கிறேன். ஒருமுறை ஐபிஎல் போட்டியின்போது திடீரென்று கோபமடைந்து களத்திற்குள் சென்று அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அது நான் செய்த மிகப்பெரிய தவறு என நினைக்கின்றேன். பல சமயங்களில் நமக்கு நிச்சயமாக கோபம் வரும். ஏனென்றால் நாங்கள் ஒரு போட்டியில் விளையாடுகிறோம். அப்போது வெற்றி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு கட்டாயம் இருக்கும். இதற்காக நாம் பல விஷயங்களை நிர்வகிக்க வேண்டும். ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு நிச்சயம் கோபம் வரும். அந்த சமயத்தில் உங்கள் வாயை நீங்கள் மூடி கொள்வது நல்லது. கொஞ்ச நேரம் அதை விட்டு விலகி விடுங்கள். இவ்வாறு செய்தால் உங்களால் நெருக்கடியை சமாளிக்க முடியும்" என்று பதிலளித்திருக்கிறார்.

தோனி

தோனி குறிப்பிட்ட அந்த போட்டி 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அப்போது பென் ஸ்டோக்ஸ் வீசிய நோ பாலை இரண்டாவது நடுவர் திரும்ப பெற்றதால் கடுப்பான தோனி களத்திற்கு வந்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தோனிக்கு போட்டியிலிருந்து 50 சதவீதம் ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Kohli: `அழுத்தமான சூழலில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும்...' - பிசிசிஐ கட்டுப்பாடு குறித்து கோலி

இந்திய அணி வீரர்கள் இனி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என பிசிசிஐ சமீபத்தில் ஒரு விதியை அமல்படுத்தியிருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அண... மேலும் பார்க்க

WPL : 'தொடர்ச்சியாக மூன்று இறுதிப்போட்டிகளில் தோல்வி'- மனமுடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் மெக் லேனிங்

வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக டெல்லி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று சீசன்களில் இறுதிப்போட்டியில் தோற்றிருக்கி... மேலும் பார்க்க

Raina: `Mr.IPL பட்டம் ஒன்னும் சும்மா கொடுக்கல' - ரெய்னாவின் அந்த ஆட்டம் நினைவிருக்கிறதா?

கடந்த 17 சீசன்களில் ஐ.பி.எல் எவ்வளவோ மாற்றங்களை பார்த்துவிட்டது. சீசனுக்கு சீசன் பேட்டர்கள் அதிரடியாக ஆடும் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சீசனில் ஹெட்டும் அபிஷேக்கும் சேர்ந்து சன்ரைசர்ஸூ... மேலும் பார்க்க

Virat Kohli: "சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை சோசியல் மீடியாவில் பகிராதது ஏன்?" - கோலி விளக்கம்

2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தயாரிப்புகள் மிகவும் விமரிசையாக நடந்துவருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் தங்களது அணியினருடன் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். நேற்று ஆர்சிபி அணியின் நிகழ்ச்சி ஒன்... மேலும் பார்க்க

Virat Kohli: "பதட்டப்படாதீர்கள்... ஓய்வு பெறுவதற்கான நேரம்..." - விராட் கோலி பேசியது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களுள் ஒருவர் விராட் கோலி. 36 வயதாகும் இவர் ஏற்கெனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், மற்றொரு ஆஸ்திரெலிய டூர் தனக்குச் சாத்தியப்படாம... மேலும் பார்க்க

WPL 2025: இறுதிவரைப் போராடிய டெல்லி கேபிடல்ஸ் வீராங்கனைகள்... மீண்டும் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அ... மேலும் பார்க்க