செய்திகள் :

Virat Kohli: "சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை சோசியல் மீடியாவில் பகிராதது ஏன்?" - கோலி விளக்கம்

post image

2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தயாரிப்புகள் மிகவும் விமரிசையாக நடந்துவருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் தங்களது அணியினருடன் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். நேற்று ஆர்சிபி அணியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விராட் கோலி சமூக வலைத்தள பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டது குறித்துப் பேசியுள்ளார்.

சாதனைகளுக்காக அல்ல; விளையாட்டின் மீதான காதலுக்காக...

முன்னதாக விராட் கோலியின் ஓய்வு பற்றி எழும் வதந்திகளுக்கு முடிவு கட்டும் விதமாக, தற்போது தனது மனதில் ஓய்வு பற்றிய சிந்தனை இல்லை எனக் கூறியுள்ளார் விராட்.

சாம்பியன்ஸ் டிராபி 2025 வெற்றிக்குப் பிறகு, விராட் கோலி 2027 தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு ரசிகர்களிடம் ஆதரவு பெருகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐபிஎல் தொடருக்காகத் தயாராகிவரும் விராட் கோலி, தனது கரியரின் முக்கியமான இந்த கட்டத்தில், சாதனைகளை நோக்கி அல்லாமல், விளையாட்டை நேசித்து விளையாடுவதாகக் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் பற்றி Virat Kohli...

முன்னதாக ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவந்த கோலி, தற்போது ஆன்லைனில் மிகவும் குறைவாகச் செயல்படுகிறார். இதற்கான முக்கிய காரணமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றவில்லை எனக் கூறியுள்ளார்.

விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 270 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர், எக்ஸ் தளத்தில் 66.1 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். சமீப காலமாக அவரது சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் பற்றிய பதிவுகளை விட விளம்பரங்களே அதிகம் பதிவிடப்படுகின்றன.

Virat Kohli in AD

சாம்பியன்ஸ் டிராபி வெற்றியைக் கூட அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல், விளம்பரங்களைப் பகிர்ந்தது ரசிகர்களிடம் கேள்வியை எழுப்பியது.

இதுகுறித்து, "நான் சமூக வலைத்தளங்களில் பதிவிடாததற்குக் காரணம், எந்த குறிக்கோளும் இல்லாமல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அழிவுகரமானது. சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மக்களின் கமெண்ட்கள் என்னிடம் எந்த ரியாக்‌ஷனையும் வரவழைப்பதில்லை என்பதால் நான் எதையும் பதிவிடவும் அவசியமில்லை" எனக் கூறியுள்ளார்.
விராட் கோலி

2025 ஐபிஎல்லின் முதல் போட்டியில் ஆர்.சி.பி அணி, நடப்பு சாம்பியனான கே.கே.ஆர் அணியுடன் வரும் 22ம் தேதி மோதுகிறது. விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதால் வழக்கம் போல் ரசிகர்களுக்கு அவரிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய கேப்டனின் (ரஜத் படிதர்) கீழ் விளையாடப்போகும் விராட் தனது அனுபவத்தின் மூலம் அணிக்குத் தூணாக விளங்குவார் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்!

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Sourav Ganguly: அதிரடி போலீஸ் கெட்டப்பில் டாடா... வெப் சீரிஸில் நடிக்கிறாரா சௌரவ் கங்குலி?

'தி காக்கி: தி பெங்கால் சாப்டர்' படத்தின் புரோமோ வீடியோவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆச்சரியத்தைப் பகிர்ந்து ... மேலும் பார்க்க

IPL 2025: "தங்கம் சார்..." - ஸ்டெயின், பாண்ட் சொல்லும் சமகால சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் யார்?

ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒருவாரம் கூட முழுமையாக இல்லை. இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அனைத்து வீரர்களும் தங்கள் ஐ.பி.எல் அணிகளுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன... மேலும் பார்க்க

Pakistan: '804' என்ற எண்ணால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 1.4 மில்லியன் அபராதம்; பின்னணி என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் '804' என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் அவருக்குச் சுமார் 1.4 மி... மேலும் பார்க்க

IPL 2025: "தோனி அல்ல; இவருடைய கேப்டன்சியில் விளையாடுவதே என் விருப்பம்" - கனவைப் பகிரும் ஷஷாங்க் சிங்

வெளியூர் சண்ட போதும், இனி உள்ளூர் சண்ட போடுவோம் என சாம்பியன்ஸ் ட்ராபி முடிந்த கையோடு, வருகின்ற சனிக்கிழமை தொடங்கும் ஐபிஎல் தொடரை வரவேற்கக் காத்திருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். எப்போதும் போல... மேலும் பார்க்க

Kohli: `அழுத்தமான சூழலில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும்...' - பிசிசிஐ கட்டுப்பாடு குறித்து கோலி

இந்திய அணி வீரர்கள் இனி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என பிசிசிஐ சமீபத்தில் ஒரு விதியை அமல்படுத்தியிருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அண... மேலும் பார்க்க

Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்பவம்!

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. 3 ஐசிசி கோப்பைகள், 5 ஐபிஎல் கோப்பைகளை அணிக்காக வென்று கொடுதித்திருக்கிறார். தோனியின் அடையாளமே அவர் களத்தில் எப்போதும் அமைதியாக இருந்து தனது திட்டத்தை நக... மேலும் பார்க்க