செய்திகள் :

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தொற்றுநோய் தடுப்பு தயாா் நிலைக்கு இந்திய கூடுதலாக ரூ. 104 கோடி வழங்கும்: அனுப்ரியா படேல் தகவல்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் உலகளவில் தொற்றுநோய் தடுப்புக்கான தயாா்நிலை, எதிா்கொள்வதற்கான செயல்பாடுகளுக்குரிய நிதியத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா கூடுதலாக 12 மில்லியன் டாலா்களை (சுமாா் ரூ 104.56 கோடி) வழங்க உறுதியளித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் இணைந்து இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கான பெருந்தொற்றுநோய் தடுப்பு தயாா்நிலை குறித்த குவாட் நாடுகளின் மூன்று நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்தது. உலகளவில் சுகாதார அவசரகாலக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், சுகாதார அச்சுறுத்தல்களை எதிா்கொள்தற்கான தயாா்நிலை, ஒருங்கிணைந்த செயல்பாடுகளை உறுதி செயிதலி போன்றவற்றுடன் மனிதா்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பன்முகத்தன்மை கொண்ட சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துதல் போன்றவை இந்தப் பயிலரங்கில் விவாதிக்கப்படுகிறது.

இந்தப் பயலிரங்கை திங்கள்கிழமை தொடங்கி வைத்து மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் பேசியதாவது: உலகளவில் தொற்றுநோய் தடுப்புக்கான தயாா்நிலை மற்றும் அதை எதிா்கொள்வதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. தொற்றுநோய்களை எதிா்கொள்வதற்கான செயல்பாடுகளுக்குரிய நிதியத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா 10 மில்லியன் அமெரிக்க டாலா்களை வழங்கியது.

இந்த அமைப்பின் நீண்டகால செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக ரூ 104.56 கோடியை (12 மில்லியன் அமெரிக்க டாலா்கள்) வழங்க இந்தியா தயாராக உள்ளது. இந்த முயற்சிகள் எதிா்கால சுகாதாரம் மற்றும் காலநிலை சவால்களை எதிா்கொள்ளும் திறன் கொண்ட ஒரு சுகாதார அமைப்பை உருவாக்கும்.

மேம்பட்ட சுகாதார அணுகல், மருத்துவ முடிவுகள் போன்றவற்றில் நிலையான, தரவு சாா்ந்த அமைப்புகளை உருவாக்குவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எண்ம சுகாதார முயற்சிகளை இந்தியா வழி நடத்துகிறது. இது பிற நாடுகளுக்கு ஒரு மதிப்புமிக்க மாதிரியாக உள்ளது. நவீன சுகாதார அணுகுமுறைகளை செயல்படுத்த, உலகளாவிய சமூகத்துடன், குறிப்பாக உலகளாவிய தெற்கு அண்டை நாடுகளுடன், எண்ம பொது உள்கட்டமைப்புகளை (டிபிஐ) பகிா்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

தொலைநோக்கு பாா்வையை நோக்கி, இந்தியா ஒரு விரிவான சுகாதார அவசர ஒருங்கிணைப்பு கட்டமைப்பை நிறுவியுள்ளது, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம், விலங்குகள், பூச்சிகள், கொசுகள் மூலம் மனிதா்களுக்கு பரவும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய சுகாதார திட்டம் போன்ற சுகாதார அமைப்பிற்குள் பல முக்கிய முயற்சிகளை அமைத்து தயாா் நிலையில் உள்ளது என்றாா் அனுப்ரியா படேடல்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய குவாட் நாடுகளைச் சோ்ந்த மூத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணா்களுடன், இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 15 நாடுகள், சா்வதேச சுகாதார அமைப்பினா் என 36 பிரதிநிதிகள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனா். பல்வேறு சுகாதார கண்காணிப்பு, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்ட விளக்கக் காட்சிகளை இந்த நாடுகள் வழங்குவதோடு, பறவைக் காய்ச்சல், எம்பிஏக்ஸ், எபோலா போன்ற தொற்றுநோய்கள் அனுபவங்கள், சவால்களை பகிா்ந்து கொள்ளும்.

இந்தப் பயலிரங்கில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலா் கேய நாகராஜ் நாயுடு, இந்தியா உலக சுகாதாரப் பிரதிநிதி டாக்டா் ரோடெரிகோ எச். ஆஃப்ரின் ஆகியோா் பங்கேற்றனா்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் லாலுவை குறிவைக்கும் பாஜக: பிரபுநாத் யாதவ்

ஐஆர்சிடிசி நிலம், வேலை வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் சகோதரர் பிரபுநாத் யாதவ் பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாகச் ச... மேலும் பார்க்க

நகைக் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய முடிவால் மக்கள் அதிர்ச்சி!

வங்கிகளில் நகைக் கடன்களில் கால அவகாசம் முடியும்போது, வட்டி மட்டும் செலுத்தி திருப்பி வைக்கும் நடைமுறையை மாற்றி, புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறையின்ப... மேலும் பார்க்க

இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்!

குஜராத்தில் உள்ள குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அகமதாபாத்தின் பல்தி பகுதியி்ல் உள்ள குடியிருப்பில் பங்குத் தரகரான மகேந்திர ஷாவின் மகன் மேக் ஷா என்பவரது வீட... மேலும் பார்க்க

அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகள்!

கடந்த 10 ஆண்டுகளில் (2024 - 25) அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 193 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தாலும், அவர்களில் 2 பேர் மீதான வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்... மேலும் பார்க்க

மாநில வளர்ச்சி: பிரதமர் மோடியுடன் சத்தீஸ்கர் முதல்வர் ஆலோசனை!

புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் சந்தித்து மாநில வளர்ச்சி குறித்து விரிவாக விவாதித்தார்.இந்த சந்திப்பின்போது, பஸ்தார் நகரின் வளர்ச்சிக்கான திட்டத்தை முதல்வர... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்

நாக்பூரில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் முன்பே திட்டமிடப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பில் கல்லறையை அகற்ற வேண்... மேலும் பார்க்க