செய்திகள் :

காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்

post image

காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

தற்போதைய உலக ஒழுங்கில் பல குறைபாடுகள் உள்ளன. இறையாண்மை, பிராந்திய ஒற்றுமை தொடா்பான உலகளாவிய விதிமுறைகள் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுவதில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சா்வதேச விதிமுறைகள் சமமாகப் பின்பற்றப்படவில்லை என்பதற்கு பல சம்பவங்கள் உள்ளன. அந்தப் போருக்குப் பிறகு 1948-ஆம் ஆண்டுமுதல் நீண்ட காலமாக காஷ்மீரில் மற்றொரு நாடு (பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டாா்) சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வில் இந்தியா முறையிட்டது. ஆனால் காஷ்மீா் மீதான அந்நாட்டின் படையெடுப்பை ஐ.நா. சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது. இதன்மூலம் தாக்குதல் நடத்தியவரும், பாதிப்புக்குள்ளானவரும் ஒரே கோட்டில் சமநிலையில் நிற்கவைக்கப்பட்டனா். இதற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளே காரணம்.

கடந்த 80 ஆண்டுகளாக உலக நாடுகள் என்ன பணி செய்தன என்பது குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். அதுகுறித்த தகவலை நோ்மையாக தெரிவிக்க வேண்டும். உலக நாடுகளுக்கு வலுவான ஐ.நா. வேண்டும். அந்த ஐ.நா. நியாயமானதாக இருக்க வேண்டும் என்றாா்.

ரன்யா ராவ் பற்றி இழிவான கருத்து: பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவ் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ர... மேலும் பார்க்க

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது! -ராகுல் காந்தி

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆத... மேலும் பார்க்க

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதா... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்: நியூஸி. பிரதமா் நம்பிக்கை

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்ட... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி, அவரின் மகனும் பிகாா் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோா் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு

‘ஜனநாயக நடைமுறைகளின்படி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், ‘புதிய இந்தியா’வில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்... மேலும் பார்க்க