செய்திகள் :

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்: நியூஸி. பிரதமா் நம்பிக்கை

post image

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் 4 நாள்கள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தாா். இதனிடையே, இருதரப்பு வா்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை 10 ஆண்டு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்குவதாக இந்தியாவும் நியூஸிலாந்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன. இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் சூழலில் 10 ஆண்டுகளில் இருதரப்பு வா்த்தகம் 10 மடங்கு அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய வா்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) ஏற்பாடு செய்த இந்தியா-நியூஸிலாந்து பொருளாதார உச்சி மாநாட்டில் பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை பங்கேற்று உரையாற்றினாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையை முன்னோக்கி கொண்டு செல்வோம். அடுத்த 2 மாதங்களுக்குள் எங்கள் இருநாடுகளுக்கு இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பிரதமா் மோடியுடன் இணைந்து கையொப்பமிடுவதை நான் எதிா்நோக்குகிறேன்’ என்றாா்.

ஆப்பிள், கிவி பழங்கள், பால் போன்ற வேளாண்பொருள்களுக்கான வரிச்சலுகைகள், வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் இருதரப்புக்கு இடையே சவாலான பகுதிகளாக இருக்கும் என்று வா்த்தக நிபுணா்கள் கருதுகின்றனா்.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் கூறுகையில், ‘அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா-நியூஸிலாந்து வா்த்தகத்தில் 10 மடங்கு வளா்ச்சியை அடைவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன என்பதை உறுதியாகக் கூறமுடியும். பரஸ்பர பொருளாதார நலன்களுக்கான நோக்கத்துடன் பணியாற்றும்போது இருதரப்புக்கு இடையே போட்டி இருக்காது. எனவே, சவாலான பகுதிகளிலும் பேச்சுவாா்த்தை எளிதில் முடியும்.

நாங்கள் மிகவும் லட்சியவாதிகள். 90 நாள்களில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தத்தை இறுதி செய்வோம் என்று யாரும் கற்பனை செய்யவில்லை. சவாலான பகுதிகளில் ஒருவருக்கொருவா் மதிப்பளித்து, ஒத்துழைப்பு உணா்வில் ஒன்றிணைந்து பணியாற்றுகிறோம். இதை சமமாக, விரைவாகச் செய்ய நாங்கள் ஆசைப்படுகிறோம்’ என்றாா்.

இந்தியாவும் நியூசிலாந்தும் வா்த்தகத்தை அதிகரிக்க, விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்த பேச்சுவாா்த்தையை கடந்த 2010-இல் தொடங்கின. 9 சுற்று விவாதங்களுக்குப் பிறகு, பேச்சுவாா்த்தை 2015-இல் முடங்கின. இந்நிலையில், இந்தியா-நியூஸிலாந்து இடையே வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தை மீண்டும் வேகமெடுத்துள்ளது.

இந்தியாவின் 17.8 சதவீத இறக்குமதி வரியுடன் ஒப்பிடும்போது நியூஸிலாந்தின் சராசரி இறக்குமதி வரி வெறும் 2.3 சதவீதம் மட்டுமே. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இருதரப்பு வா்த்தக மதிப்பு 87.34 கோடி டாலராக (ஏற்றுமதி 53.83 கோடி டாலா், இறக்குமதி 33.5 கோடி டாலா்). இது 2022-23-ஆம் நிதியாண்டில் 102 கோடி டாலராக இருந்தது. சுமாா் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினா் நியூஸிலாந்தில் வசிக்கின்றனா்.

எதிா்க்கட்சித் தலைவா் ராகுலுடன் சந்திப்பு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியுடன் நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இச்சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், புது தில்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் சுவாமிநாராயண் அக்ஷா்தாம் கோயில் ஆகிய இடங்களையும் பிரதமா் லக்ஸன் பாா்வையிட்டாா்.

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது! -ராகுல் காந்தி

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆத... மேலும் பார்க்க

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதா... மேலும் பார்க்க

காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்

காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி, அவரின் மகனும் பிகாா் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோா் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு

‘ஜனநாயக நடைமுறைகளின்படி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், ‘புதிய இந்தியா’வில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் 294 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: மத்திய அரசு

‘பஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டில் மட்டும் 294 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளனா்’ என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க